ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல் ,ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்; மூவர் காயமடைந்ததாக கத்தார் தகவல்
ஈரானின் புஷெஹர்
ஈரானின் புஷெஹர் (Bushehr) மாகாணத்தில் உள்ள அசல்யே (Asaluyeh), திர் (Dir), புஷெஹர் நகரம், தஷ்டி (Dashti) மற்றும் தங்கஸ்தான் (Tangestan) ஆகிய ஐந்து
நகரங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ‘ஐஆர்என்ஏ’ (IRNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“அமெரிக்க-சியோனிச எதிரி தரப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதைத் தொடர்ந்து, இந்நகரின் நான்கு இடங்களில் எதிரியின் ஏவுகணைகள் அல்லது
குண்டுகள் தாக்கியுள்ளன,” என்று புஷெஹர் ஆளுநர் முகமது மொசாஃபரி ‘ஐஆர்என்ஏ’-விடம் தெரிவித்தார்.
“புஷெஹர் நகரத்தின் மூன்று பகுதிகளிலும், அந்நகரின் ஒரு பகுதியாக விளங்கும் சோகதாக் (Choghadak) நகரைச் சுற்றியுள்ள ஒரு பகுதியிலும்
எதிரியின் மொத்தம் 10 ஏவுகணைகள்
எதிரியின் மொத்தம் 10 ஏவுகணைகள் அல்லது குண்டுகள் தாக்கியுள்ளன,” என்று கூறிய அவர், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.45 மணி முதல் 3 மணிக்குள் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
இத்தாக்குதல்களில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வாரத் தொடக்கத்தில் புஷெஹரில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், புஷெஹர் அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தின.
இதற்கிடையில், எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் நடவடிக்கைகளின்போது கீழே விழுந்த சிதறல்களால் ஒரு குழந்தை உட்பட
மூவர் காயமடைந்ததை கத்தார் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.







