ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள் அல்லது விளைவைச் சந்தியுங்கள்” – அமெரிக்காவிடம் ஈரான் தலைவர் காலிபாஃப் எச்சரிக்கை
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்
“ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்களின் காலம் முடிந்துவிட்டது” என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“நாங்கள் உங்களிடம் சொன்னோம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள் அல்லது விளைவைச் சந்தியுங்கள். யதார்த்தம் இப்போது கதவைத் தட்டுகிறது,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) 5-வது பிரிவைக் காட்டும் படத்தையும் காலிபாஃப் தனது பதிவில் இணைத்திருந்தார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசு
அப்படத்தில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசு இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்” (The Islamic Republic of Iran will make arrangements) என்ற வாசகங்கள் நீல நிறத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டிருந்தன.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது தொடர்பான அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான கருத்து
வேறுபாடுகள், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் ஏற்பட வழிவகுத்துள்ளன.







