இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள்

Spread the love

இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள்

இலங்கை ;இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது .

இவ்வாறு எரிபொருளுக்கு காத்திருந்து அவை தீர்ந்ததும் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பி செல்கின்ற துயர நிலையும் ஏற்படுகிறது .

பண்டுலுகம பகுதியில் எரிபொருள் வாங்கிட மோட்டார் சைக்கிளில் காத்திருந்த பத்தொன்பது வயது வாலிபன் ஒருவரை டிப்பர் மோதியதில் அவர் பலியாகியுள்ளார் .

நாட்டை கொள்ளையடித்து மக்கள் வாழ்வியலை எண்ணி கவலை கொள்ளாது இவ்வாறு இழிநிலைக்கு இட்டுள்ள கோட்டாபாயவை இந்த பழிபாவம் சும்மா விடாது என ஏரி பொருள் கொள்வனவு செய்திட காத்திருந்த பெண்மணி ஒருவர் திட்டி தீர்த்துள்ளார் .

திருடர்கள் நாட்டில் சுகபோக ஆட்சியை நடத்திய வண்ணம் உள்ளனர் .ஆனால் அப்பாவி மக்கள் நாள் தோறும் எரிபொருளுக்கு காத்திருந்து இறந்த வண்ணம் உள்ளனர்..

எரிபொருள் இன்றி தொழில் துறைகள் முடக்க பட்டுள்ளன .நாடு மிக மோசமான நிலையை சந்தித்த வண்ணம் உள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை எப்பொழுது மீள போகிறது என்பதே எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் ஏக்கமாக உள்ளது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *