அண்ணா

அண்ணா
Spread the love

அண்ணா

நஞ்சினை மாலையாய் அணிந்தவர்
பிஞ்சிலே வேங்கையாய் நிமிர்ந்தவர்
துஞ்சிடா வீரத்தைக் கொண்டவர்-நம்
நெஞ்சிலே ஈரத்தை விதைத்தவர்!

கஞ்சியை நாளுமே உண்டேனும்
பஞ்சியை துளியேனும் கொள்ளாமல்
கொஞ்சியே பேசிடும் தமிழுக்காய்- தன்
எஞ்சிய வாழ்வினை அர்ப்பணித்தவர்!

மிஞ்சியே பகை படை கொண்டு வந்தாலும்
அஞ்சியே எங்கேனும் ஓடிடாமல்
விஞ்சியே நின்று பகை எதிர்த்து– எம்
மஞ்சிய தாய் நாட்டைக் காத்தவர்!

கெஞ்சிடும் குடும்பத்தைத் துறந்தவர்
பஞ்சிடும் பஞ்சணையை வெறுத்தவர்
தஞ்சிடும் மக்களைக் காத்தவர் – கடும்
வஞ்சிடும் துரோகிகளை துவைத்தவர்!

வஞ்சியருக்கு சமவுரிமையை கொடுத்தவர்
அஞ்சியவருக்கும் வீரத்தை ஊட்டியவர்
துஞ்சியவரையும் தன்னாற்றலால்
எழ வைத்தவர் – எதிரியாயினும்
கெஞ்சியவருக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவர்!

கெஞ்சியே இறைஞ்சுகின்றோம்
எஞ்சிய எம் வாழ்வைக் கழித்திட
விஞ்சிய மனவுரத்தை தந்திட – நம்
நெஞ்சிலே என்றும் இறையாய்
வாழுங்கள் அண்ணா!

-நிலாதமிழ்.
25.05.2024.