முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்
Spread the love

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம், என முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் தொண்ணூறு ஆயிரம் ஏக்கரில் மட்டும் குடி கொண்டுள்ளார்கள் எனவும் ,ஏனைய பகுதிகள் யாவும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதாக ரவிகரன் தெரிவித்தார் .

தொடர்ந்தும் தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி ,சிங்கள பவுத்த பேரினவாத இராணுவம் நிலை கொண்டுள்ளது .

இறுதி போர் முடிவடைந்ததை அடுத்து தமிழர் முதன்மையான பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள இராணுவம் அகல கால் ஊன்றியுள்ளது குறிப்பிட தக்கது .