மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில்
மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில் சிக்கியுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பதிவுகள் சில காண்ப்பிக்கின்றன .
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சைக்கோ மருத்துவர் அல்லது சக மருத்துவர்களை மன நோயாளியாக சித்தரிக்கும் ,
சத்தியமூர்த்தி என்கின்ற மருத்துவர் அர்ச்சுனாவை போல தற்போது நாகநாதன் மருத்துவரை கூண்டில் ஏற்ற பொலிஸ் விசாரனையை ஆரம்பித்துள்ளார் .
நாகநாதன் மருத்துவரை அணுகிய காவல்துறையினர் அவரை விசாரணைக்கு உள்ளாகியுள்ளதாகவும் ,அதில் அவர் சிகிச்சை புரிகின்ற சத்திர சிகிச்சை பகுதியில் மருத்துவர்கள் தாதிமார்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ள பட்டதாக சமூகவலைத்தள பதிவுகள் பேசுகின்றன .
தங்களது மாபியா கொள்ளையை தடுக்கும் முகமாக அப்பாவி மருத்துவர்களை மிரட்டி ஒடுக்கும் நடவடிக்கையில் சத்தியமூர்த்தி ஈடுபட்டு வருகின்றார் .
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மருத்துவமனை ஊழல்களை கூறுபவர்களை மிரட்டி அடக்கும் ஒரு திறந்த நிகழ்ச்சி நிரலின் திட்டமிட்ட நகர்வாக இந்த வைத்தியர் நாகநாதன் மீதான பொலிஸ் விசாரணை விடயம் பார்க்க படுகிறது .
போலீஸ் விசாரணைக்கு உள்ளான மருத்துவர் நாகநாதன் தனது சட்டத்தரணியை நாடியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது .
தமிழ் மக்களின் கலாச்சார பட்டினத்தில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான சத்தியமூர்த்தியின் ,தனக்கு எதிராக அவதூறு பரப்பினார் என்கின்ற இழி செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு








