மனைவி பிள்ளைகளை பணயக்கைதிகளாக்கி நகைகள் திருட்டு
கற்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, கொலனி பிரதேசத்தில் உள்ள மரக்கறி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரின்
வீட்டில் ஆயுத முனையில் 1 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவக்காடு – கொலனி பகுதியில் உள்ள குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு நேற்று (2) காலை கைத்துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி
நுழைந்த இந்த ஆயுதக் கும்பல் முதலில் அங்கிருந்த தொழிலதிபரையும் , அவரது மனைவி உட்பட குடும்பத்தினரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர் எனக் கூறப்படுகிறது.
மனைவி பிள்ளைகளை பணயக்கைதிகளாக்கி நகைகள் திருட்டு
இவ்வாறு, குறித்த வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த ஆயுதக் குழுவினர், அவர்களை கொலை
செய்யப் போவதாக மிரட்டியதுடன், வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை வலுக்கட்டாயமாக திறந்துள்ளனர் என மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 30 இலட்சம் ரூபா பணம் என்பனவற்றை
கொள்ளையடித்த ஆயுதக் குழுவினர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்
- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை
- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்
- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு
- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

















