மக்கள் பணத்திற்கு ஆப்படித்த அர்ச்சுனா
மக்கள் பணத்திற்கு ஆப்படித்த அர்ச்சுனா , வெளிநாடுகளிலிருந்து மக்களிடம் பெற்றுக் கொண்ட பணத்தினை தற்பொழுது கணக்கு காட்டும்படி மக்கள் கேட்டதை அடுத்து தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் கணக்கை காண்பித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனை அடுத்து தற்பொழுது தனது தேர்தல் செலவிற்கு 12,900 ரூபாய்களை மட்டுமே தான் செலவு செய்ததாக அவர் தெரிவித்து இருக்கின்றார் .
இவர் காண்பித்துள்ள இந்த கணக்கு மக்கள் மத்தியில் கொதிப்பையும் கோப அலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக 56 லட்சம் ரூபாய்கள் தேர்தல் செலவுக்கு சேகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்து இருந்தார் .
அதை அடுத்து நேரடியாக அவரது கணக்கிற்கு முப்பது லட்சத்துக்கு மேற்பட்ட ரூபாய்களை தாங்கள் பணத்தை அனுப்பியதாக ரசீதுகளையும் அவர்களுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை அடுத்து தற்பொழுது இந்த கணக்கு அறிக்கை என்பது மக்கள் மத்தியில் குழப்பத்தையும்,அதிர்ச்சியையும் ,அருச்சுனாவுக்கு எதிரான எதிர்ப்பலைகளையும் கிளப்பி இருக்கின்றது .
தேர்தல் ஆரம்பித்த காலப்போவதில் இருந்து இதுவரை காலப் பகுதியில் அர்ச்சுனா இராமநாதருக்கு மக்கள் பரிபூரணமான ஆதரவை வழங்கி வந்தார்கள்.
ஆனால் அதனை செவிமடுக்காது மக்களை ஏமாற்றி மக்கள் ஏமாற்றி பணம் பெற்று கொள்ளும் நடவடிக்கையில் அருச்சுனா ஈடுபட்டு வருகிறார் என்ற சம்பவம் தான் தற்பொழுது கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அர்ச்சுனா திருந்துவாரா மக்களிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தினை பெற்றுக்கொண்ட கணக்குகளை இன்றேனும் காட்டுவாரா என மக்கள் தற்பொழுது கோப கொந்தளிப்புடன் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர் .
இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பதில் என்ன என்பதே மக்களுக்கு கேள்வியாக உள்ளது.











