கைகளை கட்டி வாலிபனுக்கு வதை
கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி அடித்து, சித்திரவதை புரிந்ததுடன், பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பையொன்றினால் முகத்தை மூடி சித்திரவதை
புரிந்தனர் என, பொலிஸாரினால் சித்திரவதையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞன் வைத்தியசாலையில் கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (19) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் தான் இளைஞன் உயிரிழந்துள்ளார் என குற்றம் சட்டி வருகின்றனர்.
கைகளை கட்டி வாலிபனுக்கு வதை
அந்நிலையில், உயிரிழந்த இளைஞன் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது, தனக்கு நடந்த சித்திரவதை தொடர்பில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அதில் ” என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள்.
துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள்.
பின்னர் எனக்கு குடிக்க மது தந்தார்கள். தாக்குதல்கள் சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள்.
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்
- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்
- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்
- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.
- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்
- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை















