கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை
இலங்கைக்கு தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்று இன்று (26) பிற்பகல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் ஆஜராகியிருந்தது.
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மேற்படி அமைச்சின்
மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்க மற்றும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- அனுராதபுரத்தில் 5000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற குழந்தைகள்
- போலி போக்குவரத்து அபராத மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள்
- களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் பலி
- இலங்கையின் அனைத்துக் குடிமக்களிடமும் சமாதானம் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை வளர்க்க சஜித் அழைப்பு











