காசாவில் 25 மக்கள் படுகொலை

காசாவில் 25 மக்கள் படுகொலை
Spread the love

காசாவில் 25 மக்கள் படுகொலை

காசாவில் 25 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்ச்சு இன்று தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பாலஸ்தீனம் காசா பகுதியில் தங்கியுள்ள மக்கள் மீது ,இஸ்திரேலியா ராணுவத்தினர் ,நடத்திய மிலேச்ச தனமான தாக்குதலில் 25 அப்பாவிப் பொது மக்கள் பலியாகி உள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்து தற்காலிக கூடாரங்கள் வீதிகளில் தங்கி வாழும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் பொழுதே அங்கிருந்த மக்கள் 25 பேர் உடல் சிதறி பலியாகினர் .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற ,நீண்ட யுத்தத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் ,இதுவரை பலியாகியம் , ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

5 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் அடித்து உடைத்து நாசமாக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது .

பாலஸ்தீனம் இன்று சுடுகாடாக காட்சியளிக்கிறது .

உலக நாடுகள் இஸ்ரேல் நடத்தும் இந்த இனப்படுகொலையை ,வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளது கவலையை தருகிறது.