ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது ,ஒக்கம்பிட்டியா, மாலிகாவில, ஜோதி அமுனா பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கிய காட்டு யானை ஒன்றும் அதன் குட்டியும் உயிரிழந்தன.
காட்டு விலங்குகளிடமிருந்து கரும்பு, பப்பாளி, வாழை
காட்டு விலங்குகளிடமிருந்து கரும்பு, பப்பாளி, வாழை மற்றும் நெல் பயிரிடப்பட்டிருந்த பெரிய அளவிலான தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக
அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதால், அந்த இரண்டு காட்டு யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
உயிரிழந்தவை, சுமார் ஆறு அடி உயரமுள்ள 20 வயது யானையும், சுமார் நான்கு அடி உயரமுள்ள ஒரு வயது யானைக் குட்டியும் ஆகும்.
வனவிலங்கு அதிகாரிகளால் கைது
அந்த நிலத்தைப் பாதுகாத்து வந்த நபர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அதே சமயம், மின்சாரக் கம்பி போடப்பட்டிருந்த
நிலத்தின் உரிமையாளர் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடி தற்போது தலைமறைவாக உள்ளார்.
அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வனவிலங்கு அதிகாரிகளும் ஒக்கம்பிட்டியா காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.







