ஊழல் வாதிகள் கும்மாளம் ஆளுநர் குறட்டை

ஊழல் வாதிகள் கும்மாளம் ஆளுநர் குறட்டை
Spread the love

ஊழல் வாதிகள் கும்மாளம் ஆளுநர் குறட்டை

ஊழல் வாதிகள் கும்மாளம் ஆளுநர் குறட்டை விடுவதாக தமிழ் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கி வரும் அனுரகுமார திசாநாயக்க, இலங்கை வாழ் மக்களிற்கு விடியலை வழங்குவார் என ஏதிர்பார்க்க பட்டு வந்த நிலையில் ,அது சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

வடக்கு பகுதியில் வசிக்கும் தமிழர்கள் மக்கள் வாழ்வியலில் அக்கறை கொண்டு ,ஆளும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ,செயல்படுவதாக தெரியவில்லை .

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வடக்கு பகுதி காவல் நிலையங்களில் ,தமிழ் மொழி பேசும் காவல்துறையை இதுவரை பணிக்கு அமர்த்தவில்லை .

தேர்தலின் பொழுது வழங்க பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கும் நிலை காணப்படுவதாக சமீப நாட்கள் நகர்வுகள் காண்பிக்கின்றன .

வடக்கு பகுதியில் மருத்துவமனைகளில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக ,வடக்கு மாகாண ஆளுநராக பதவி ஏற்றவரும், அதனை விசாரிக்கவில்லை .

வடக்கு ஆளுநர் நாள்தோறும் இலங்கை ஆள்கின்ற ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பேசுவார் .

வடக்கு நிலவரங்கள் தொடர்பாக ன் ஜனாதிபதிக்கு எடுத்து விளக்குவார் .

அப்படி என்றால் அர்ச்சுனா இராமநாதன் நிலை தொடர்பாகவும் ,அவரால் மேற்கொள்ள பட்ட லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில், ஆளுநரிடம் அனுரா குமார திசாநாயக்க கேட்டு தெரிந்து கொள்ளவில்லையா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

இதே சத்தியமூர்த்தி வடக்கு ஆளுநருக்கு மாலை அணிவித்து ,பொன்னாடை போர்த்தி கவுரவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அப்படி என்றால் கடந்த ,ரணில் ,மகிந்தா ,கூலி லஞ்ச ஊழல் வாதிகள் ஆளும் அனுரா குமரா திஸாநாயக்கவின் பினாமி முகவர்களாக செயல்படுன்றனரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

அதனால் தான் வடக்கு மாகாணத்தில் மருத்துவமனைகளில் இடம்பெற்ற மருத்துவ தவறுகள் ,

அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு ,மற்றும் மோசடிகள் தொடர்பில் வடக்கு ஆளுநர் விசாரணைகளை மேற்கொள்ள மறுக்கின்றாரா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

மக்களாகிய நீங்களே இந்த விடயத்தை காதில் போட்டு வாயில் ஆட்டி .கொள்ளுங்கள் .

சிங்கள பேரினவாதத்தை நம்பி ஏமார்ந்து போன தமிழினம், மீளவும் ஏமாற்ற பட போகின்றார்களா ,என்பதே இப்போதுள்ள கேள்வியாகியுள்ளது .