அர்ச்சுனா சஜித்துடன் இணைவு
அர்ச்சுனா சஜித்துடன் இணைவு என்பதாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது முகநூல் பதில் தெரிவித்துள்ளார் .
மக்கள் பணி இன்றுடன் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .இந்த விடயம் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இடம்பெற்றுள்ளது.
அரசியலுக்குள் அவர் வருகை தருகிறார் என்ற முன் அறிவிப்பாக இது காணப்படுகிறது .
மக்கள் பணியே தனது முதல் பணி எனவும் நான் ஏதும் தவறிழைத்து இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
அவர் கூறிய அந்த முகநூல் பதிவு கீழே பார்க்க ….
எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்து வெகு நாட்களாகிறது.
இந்தப் பெரும் சுமையை எனது சின்ன கைகளில் சுமத்தி அழகு பார்க்கும் எனது இனிய தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களுடைய இந்த நம்பிக்கையை இந்த கணத்தில் நான் பிழையான வழியில் அவமதிப்பேன் என்றால் எனது வீரம் செறிந்த தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகி நானாகத்தான் இருப்பேன்.
இந்த உன்னதமான பணியை எனக்குத் தந்த எனதருமை தமிழ் சொந்தங்கள் இந்த வீர போராட்டத்திலே தங்களையே ஆகுதியாக்கி கொண்ட அண்ணா மார்கள் அக்கா மார்கள் தம்பிகள் தங்கைகள் அனைவருக்கும் என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நன்றி கடன் இது மட்டுமே.
எப்போதுமே உங்கள் நம்பிக்கை புதல்வனாக இருந்து மரணிப்பேன் என்று சொல்லிக் கொண்டு இனிவரும் காலங்கள் எமக்கு மிக முக்கியமான காலமாக இருக்கும்என்பதை நான் அறிவேன் என்பதையும் சொல்லிக் கொண்டு
எனக்கான மக்களின் போராட்டத்தில் இன்றிலிருந்து நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன் என்பதை சொல்லி இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன்.
நாங்கள் மீண்டும் சந்திப்போம்.
என தெரிவித்துள்ளார் .
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை








