Tag: ஸ்ரீலங்கா
பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன
பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன
ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும் உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது – எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை.
இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும் பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்
இலங்கையில் இரு மாதத்தில் விபத்தில் 3000 பேர் பலி
இலங்கையில் இரு மாதத்தில் விபத்தில் 3000 பேர் பலி
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் வீதி விபத்துக்களில்
சிக்கி மூவாயிரம் பேர் வரை பலியாகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார் .
அப்படியானால் நாள் ஒன்றுக்கு நாடு தழுவிய ரீதியில் ஐம்பது பேர் பலியாகி வந்துள்ளதாக இது குறிப்பிடுகிறது
இலங்கை காவல்துறையின் சமந்தா போக்கும் ,சாரதிகளுக்கு உரிய வீதி விதிமுறைகளை கடை பிடிக்காமையுமே இந்த் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன .
பாடசாலைகளில் வீதி விதி முறைகளை மேற்குலக நாடுகளை போன்று கற்று கொடுத்தால் இது போல ஏற்படாது என்பதும் .
சட்டங்களை கடுமையாக நடைமுறை படுத்தின் இந்த உயிர் பலிகளை தடுக்கலாம் என்பது மக்கள் கருத்து








