Posted in சினிமா

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா

.ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா

தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஷகிலா, தனியார் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா
ஷகிலா


தமிழ், மலையாளம், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. கேரளாவில் இவரது

படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை முறியடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. ஷகிலாவின் வாழ்க்கை

கதை சினிமா படமாகவும் வந்துள்ளது. தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

ஷகிலா

இந்த நிலையில் ஷகிலாவை திருப்பத்தூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க அழைத்து இருந்தனர். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள்

திரண்டு நின்றனர். விழா முடிந்து வெளியே வந்த ஷகிலாவை பார்த்ததும் அவரோடு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் ஷகிலா

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவர்களிடம் இருந்து ஷகிலாவை பாதுகாவலர்கள் கஷ்டப்பட்டு மீட்டு அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய வீடியோவை ஷகிலா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்

    Posted in Uncategorized

    கட்சியில் இணைந்தார் நடிகை ஷகிலா

    கட்சியில் இணைந்தார் நடிகை ஷகிலா

    மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய இப்படத்தில் ரிச்சா சத்தா ஷகிலாவாக நடித்திருந்தார்.

    ஷகிலா

    தற்போது ஷகிலா சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் தளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    ந்நிலையில், தமிழக காங்கிரஸின் மனித உரிமை துறையில் இணைந்திருக்கிறார் நடிகை ஷகிலா. இதற்கான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஷகிலா.