Tag: வீட்டுத்திட்டம்
பாரத் லங்கா வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்
பாரத் லங்கா வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெறவுள்ளது.
இதன் பணிகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் இன்று நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழா நடைபெறுகின்றது.
இதன்பிரதான நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது
14 ஆயிரம் வீடுகள் கட்டும் மகிந்த
இலங்கையில் ஆளும் மகிந்த அரசாட்சியில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 14 ஆயிரம் வீடுகள் கட்டும் படி மகிந்த
வேண்டுகோள் விடுத்துளளார் .
அமைச்சரவையில் வைக்க பட்ட தீர்மானத்திற்கு அமைய ஒரு வீடு சுமார் ஆறு லடசம் ரூபா செலவில் இந்த வீடுகள் கட்ட படுகின்றன
சுனாமி வீட்டுத்திட்டத்தில் மோசடி செய்த மகிந்தா இதுவரை அந்த பாத்திக்க பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி தரவில்லை .
இவ்வாறான நிலையில் மீளவும் வீட்டு திட்ட ,அபிவிருத்தியில் கையாடல் இடம்பெற கூடும் என்றே அடித்து கூற படுகிறது
வீட்டு திட்டங்களை என சர்வதேச நாடுகள் ஒதுக்கிய நிதியை மகிந்த ஆட்சியில் காணாமல் போனது ,
மீள சகோதரன் கோட்டா ஆட்சியில் இவையும் காணாமல் போகும் நிலை உருவாகும் என மக்கள் அச்சம் கொள்கின்றனர்







