Tag: வன்னிமைந்தன் கவிதைகள்
தூக்கில் போட்டு நீதியை நாட்டு …!
தூக்கில் போட்டு நீதியை நாட்டு …!
பதை பதைக்க வதை வதைத்து
பாவையவள் கொன்றாய்- அட
பால் நிலவு தேவைதையை
பல் இழித்து தின்றாய் ….
கூட்டம் வைத்து கூடி நின்று
கூவி கூவி தின்றாய் …
கூவுதடா உலக தமிழ்
கூண்டில் தூக்கில் போடாய் ….
வேடர்களை காத்திட தான்
வேட்டிகளும் துணையோ …?
பாடு பட்டு வாதடா
பைந்தமிழும் துணையோ ..?
கோட்டு போட்டு வாதிட்டால்
கோட்டும் அதிருமோ ..?- அட
நோட்டு வாங்கி வாயாட்ட
நேர்மை செழி விடுமோ …?
மனு நீதி செழியனவன்
மன்றம் நீதி தருமே – இந்த
மறை கழன்றார் நிலையழிய
மரண உடை இடுமே …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -13/09/2017
வித்தியா கொலை வழக்கு இறுதி முடிவுற்று நீதிக்காய்
காத்திருக்கும் இவ்வேளை ….!
என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி …!
என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி …!
கூண்டில் அடைத்து சிரிக்கும் மனிதா
கூண்டை திறந்து மகிழ்வாய் …
வாழும் எந்தன் வாழ்வை ஏனோ
வாடும் சிறையில் அடைத்தாய் ….?
நீதி பேசும் மாந்தன் என்றால்
நீதி கூறி நிற்பாய் ..?
நீ பெற்ற பிள்ளை ஒன்றை
நீயா வைப்பாய் கூண்டில் ..?
சிறகை வெட்டி வைத்தால் நானும்
சிரித்தே உலவி திரிவேன் ….
சிறகு அடிக்க முடியா கூண்டில்
சிறையில் வைத்தாய் பாவம் …
நாளும் வடியும் எந்த கண்ணீர்
நல்ல வாழ்வு தருமா ..?
பிள்ளை என்று பிரியம் கொட்டும்
பிரியமானீர் சொல்வீரோ …?
இறந்த பின்னர் என்னை எண்ணி
இதயம் கலங்கி அழுகாதே …
இதயம் இல்லா நீவீர் எல்லாம்
இருந்தா அழுவீர் மறக்காதே ….!
வண்ணை மைந்தன் (ஜெகன் )
ஆக்கம்-03/09/2017
அன்பு தோழி ரேணுகா வீட்டில் கிளி ஒன்று சிறை பட்ட போது….
மிதக்கும் மனித உடல்கள்- சிரிக்கும் உலகம்
மிதக்கும் மனித உடல்கள்- சிரிக்கும் உலகம்
மதவெறியால் இனம் ஒன்று
மரணம் விதைக்குதே – உலக
மன்றுகளும் இதனை கண்டு
மகிழ்வாய் சிரிக்குதே ….
உயிர் ஒன்றை குடிப்பாரை
உதைக்க மறுக்குதே – இந்த
உலக நீதி இதுவாச்சோ
உள்ளம் துடிக்குதே …..
குஞ்சோடே மறைந்து கிடந்தார்
குரலை வெட்டினான் …..
குருதி குடித்து வெறி ஏப்பம் இட்டே
குளறி சுற்றினான் …..
வாரம் ஒன்று கடக்கும் முன்னே
வழி மூவாயிரம் வீசினான் ….
வரலாற்று இன படுகொலையாய்
வாழ்வில் எழுதினான் …..

நீதி உள்ள மாந்தர் எல்லாம
நிரையாய் எழுகவே – நாளை
நீள விரியும் கொலைகள் தடுக்க
நிமிர்ந்தே வருகவே ………
அறம் இன்றி ஆளும் அரசின்
ஆட்சி குலையடா …..
அவலத்தோடே இறந்தார் ஆத்மா
அமைதியாக நிமிரடா …..!
வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் -02/09/2017
கடந்த ஒருவாரமாக மியன்மாரில் புத்த வாதிகளால் நடந்த முஸ்லீம் படுகொலைகள்
கண்டபோது…
துயர் கண்டு சோராதே
துயர் கண்டு சோராதே
இடர் கண்டு ஓரு நாளும் இடியாதே
இதயம் ஒடிந்து உயிர் மாயாதே ….
வருகின்ற தடை எல்லாம் வளமாக்கு
வருங்காலம் முடியும் தலை தூக்கு ..,,
அறியாமை உனை பற்ற அழுகின்றாய்
அதனாலே உயிர் விட முனைகின்றாய் ….
ஏதொரு பொழுதிலும் எழுந்தாடு
எமனோடும் நின்று போராடு …
உனக்குள்ளே வலிமையை உள்ளேற்று
உரமாகி எழுவாய் உனை நம்பு ….
மாற்று சிந்தையில் மடம் கட்டு
மலர்ச்சியை உந்தன் கை ஊட்டு .,.
சிந்தையில் புதிதாக கொடி கட்டு
சீக்கிரம் வெற்றிகள் உன் தோள்தட்டு …
ஆக்கினை கூடிட என் செய்வாய் ?
அழுவதால் என்ன நீ கண்டாய்..?
தேற்றியே உன்னை நீ எழுப்பு .
தேடிடும் உலகு உன் விருப்பு …,,
ஏசிய உதடெல்லாம் உனை பாடும் -நீ
எங்களின் உதராணம் என கூவும் ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -29/08/2017
அதிகரிக்கும் தமிழர்கள் தற்கொலைகளை எண்ணிய போது…..
வன்னி மைந்தன் கவிதைகள்
கண்ணீர் தந்த கடலே அழிக
கண்ணீர் தந்த கடலே அழிக
மண்டை தீவு கடல் இன்று
மரண கடல் ஆனதோ …?
உயிர் குடிக்கும் கடலாகி
உலவும் மனிதம் விரட்டுமோ …?
ஆடி படகில் ஏறி வந்தார்
ஆவியை தான் குடிக்குமோ ..?
ஆருமிங்கு உலவிடாது
அடங்கும் கடலாகுமோ …?
தேன் சுரக்கும் தோழர்களின்
தேகம் ஏனோ தின்றாய் …?
தேம்பி அழும் அவலம் ஒன்றை
தேடி ஏனோ தந்தாய் …?
நீர் பருக்கி மூச்சடக்கி
நினைவுகளை தின்றாய் ….
நீ எங்கள் கடல்தாயோ
நீ யழிந்து போவாய் ….
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -28/08/2017
28/08/2017 இன்று மண்டை தீவு கடலில் படகு கவிழ்ந்து
இறந்த தோழர்கள் துயர் அறிந்து ….
கண்ணீரால் குளிக்கிறது என் பேனா …!..!
தொலைந்து போன வசந்த வாழ்வு
தொலைந்து போன வசந்த வாழ்வு
பள்ளி கூட வாழ்வு போல ஒண்ணு வருமா ?
பள்ளியில படித்தார் கண்டால் கண்ணு தாங்குமா ..?
ஒண்ணாக படித்தாருடன் ஒண்ணா பேசல ..
ஓயாத அலையாக அவரு நம்ம நினைவில ,…
காலம் பல கடந்தாலும் கண்டா போதுமே …
கட்டி தழுவி கண்ணுதானே கலசம் பேசுமே …,
வெள்ள மனசில் என்றும் தானே கள்ளம் இல்லையே …
வெருளி சிந்தை நெஞ்சு ஓட ஒண்ணும் இல்லையே …
பிரிந்த போது தானே பிரியம் பிறந்ததே
பிரிய முன்ன வந்திருந்தா சொந்த மாகுமே ….
மனதின் ஓரம் வாழும் காதல் சொல்ல முடியுமோ ..? ..
மணம் முடித்த பின்னர் கண்டால் நெஞ்சு ஆறுமோ ..?

நம்ம மனசில் உள்ளதை நாம சொல்லல -அஞ்சி
நாம் நடந்த காலம் எண்ணி வாழ்வு சிரிக்குதே …
புத்தி இல்லா காலத்திலே புதுசா திரிந்தோம் – இன்று
புத்தி தெரிஞ்சு தெளிஞ்ச போது புண்ணாய் மனசு வலிக்குதே …
ஆராரோ என்று தானே அன்று திரிந்தோமே
அறிவு பிறந்த போது அழுது தொலைத்தோமே …..
இது தானோ நமக்கு வாழ்வாய் ஆச்சுதோ ?
இதை எண்ணி இதயம் தானே சோகம் ஆச்சுதே …
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம்24,08,2017
நமது பள்ளி வாழ்வை எண்ணியபோது …..!
வன்னி மைந்தன் கவிதைகள்
நான் இறந்த பின் என் சொல்வாய் …?
நான் இறந்த பின் என் சொல்வாய் …?
கண்ணீரில் நீ குளிக்க
காளை மனம் வாடுதடி …
இது தீர வழியென்ன
இதயமே கேட்குதடி ….
அழுதழுது நீ களைத்து
அன்றாடம் களித்திருக்க …..
பொழுது வந்து எனை திட்டி
பொல்லாப்பை விதைக்குதடி ….
நீ எறிந்த கண்ணீர்க்கு
நியமாக நான் தானோ …?
ஏ தறிந்து எனை அடித்தாய்
ஏ மனமே பதில் சொல்லு …..
பழிக்குள்ள நான் சிக்கி
பலியாடாய் துடிக்கிறேன் ….
இருந்தென்ன லாபம் எண்ணு
இதயமும் உடைஞ்சிருச்சு ….
முச்சடங்கி வீழ்ந்தாலும்
முன்னே என்னை பார்க்காதே …
பேச்சடங்கி போன பின்னே
பேசியென்ன நீ காண்பாய் …?
-வன்னி மைந்தன் (T-ஜெகன் )
அக்கம் -15/08/2017
உன் துயரில் …..அழுகிறோம் ….!
உன் துயரில் …..அழுகிறோம் ….!
செந்தமிழ் பாடிய செந்நிற மேனியை
செந்தணல் இன்று தின்பதோ ..?
எம்முடல் ஆவியாய் எமக்குள் நின்றானை
எமனே நீயும் கொல்வதோ…?
வந் தமிழ் ஊரினில் வளமுடன் நிமிர்ந்தான்
வாஞ்சை வீசியே எழுந்தான் ….
உறவுகள் மிளிர உணர்வுடன் நின்றான்
உயிரை ஏனோ பறித்தாய் …?
பாடியே அழைத்து பாசத்தை வீசி
பா வலனாகியே நின்றான் …
தொட்டியை கட்டி நீரது தேக்கி
தொழும் மாடுகள் குடிக்கவே வைத்தான் ….
அறமது நீட்டி ஆர தழுவிய
அகமது வீழ்ந்தது பேரிழப்பு …
உரமது இட்டே உயர வளர்ந்தவர்
உன்னை சுற்றியே அழுதனர் ….
வேதனை தாங்கி விழிகள் கதறிட
வேலவா ஏனடா சென்றாய் …?
சாதனை நாட்டி சாவிலும் எழுந்தாய்
சாதனை யாளனாய் சென்றுவா ….!
- வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -10/08/2017
முரசுமோட்டை -இரண்டாம் கட்டை -ராசன் அண்ணாவின் ஆறா துயரில் தவிக்கும் குடும்பத்தார்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம்
கல்லறை சாயும் காதல்
கல்லறை சாயும் காதல்
கண்ணீர் இல்லா காதல் ஒன்றை
கண்ணே கண்ணே காட்டு ….
கரங்கள் கூப்பி கடவுளிடம் கேட்டேன்
கண்ணீர் விட்டான் காணு …
இது நாள் வரையில் அழுதிடா காதல்
இவ் வையம் எங்கும் இல்ல …
இருந்தால் காட்டு இரு கரம் கூப்பி
இன்றே வணக்கம் இடுவேன் ….
உண்மையாய் காதல் கொண்டார் – நெஞ்சின்
உள்ளே அழுகின்றார் …
உள்ளே அழுது வெளியே நடித்து
உலவி திரிகின்றார் ….
நினைத்தது யாரோ மணந்தது யாரோ
இது தான் வாழ்வாச்சு ….
இதை எல்லாம் எண்ணி- அழுதே
வாழ்தல் வாழ்வின் விதியாச்சு …..
உள்ள பிழையை உறங்கு முன் அறிந்தால்
உலகே உன்னை மதிக்கும் …..
கால பிழையால் கசங்கும் காதல்
கல்லறை தானே தேடும் …!
வன்னி மைந்தன் -(ஜெகன்- T )
ஆக்கம் -04/08/2017
வன்னி மைந்தன் கவிதைகள்
அஞ்சாதே -காதல் செய்வோம் வா
அஞ்சாதே -காதல் செய்வோம் வா
உந்தன் பேச்சில் எந்தன் மனதில்
காதல் ஊறுதடி ……
உன்னை மறக்கா முடியா நிலையில்
உள்ளம் தவிக்குதடி …..
காலம் யாவும் உந்தன் மடியில்
தூங்கிட எண்ணுகிறேன் ….
கட்டளை தந்தால் போதுமடி – உன்
காலடி நான் கிடப்பேன் …..
வாழும் காலம் கொஞ்சம் தானே
வாழ்ந்தே மடிந்திடலாம் ….
வேதனை தாங்கி வாழும் வாழ்வு
வாழ்வின் விதி தானோ …?
ஆசை அடக்கி ஆயூள் பூராய்
அடி வாழ்வது முறைதானோ …?
அடக்கும் சமுகம் கண்டு பயந்தால்
அடி வாழ்தல் பிழைதானே …..
ஒடுக்கும் சிந்தை வாங்கி நெஞ்சில்
ஒளிவது முறைதானோ ….?
எதிர்க்கும் சிந்தை நெஞ்சில் தாங்கி
எழுவோம் எழுந்தே வா ….!
வன்னி மைந்தன் -(ஜெகன்- T )
ஆக்கம் -04/08/2017
வன்னி மைந்தன் கவிதைகள்
உன்னிடம் சரணடைந்தேன் ….!
உன்னிடம் சரணடைந்தேன் ….!
தூக்கம் தொலைத்த இரவுகளில்
துணையாய் பேசி நின்றவளே …
ஏங்க வைத்து ஏன் சென்றாய் …?
எங்கோ இப்போ நீ சொல்வாய் …?
கோடை வெயில் தீயாகி
கொதிக்க வைத்து ஏன் போனாய் ..?
மாரி மழையை கூட்டி வந்து
மனதை தடவி போகாயோ…?
பேசும் நாட்கள் சிலதாச்சு – நீ
பேசாதிருப்பது ஏனாச்சு ..?
தலையை ஆட்டி பதில் சொல்லும்
தந்திரம் எங்கு கற்றாயோ ..?
பக்கம் வந்து குந்தையிலே
பரவசமாகி மனம் துடிக்க …
வெட்க பட்டு நீ இருக்கும்
வேளை தன்னை இரசிக்கின்றேன் …
ஒற்றை கையால் தலை கோதி
ஒத்தி ஒத்தி தடவையிலே …
முழுவதும் உன்னில் வசபட்டேன்
முட்டியிட்டு நான் கிடந்தேன் …!
வன்னிமைந்தன் (ஜெகன் )
அக்கம் -01/08/2017
என்னை கொன்றிடு ….!
என்னை கொன்றிடு ….!
துயர் ஒன்று வந்தென்னை துண்டாடுதே
தூளாக்கி மனம் வீச பந்தாடுதே ….
வீசும் புயலாகி வலியாடுதே
விழியோடி மழையாகி குளிப்பாட்டுதே
கரை காண முடியாத கடலாகுதே – இறுதி
கல்லறை தேடும் முடிவாகுதே ….
வாலிப தவறொன்று இடியாகுதே
வான்வழி மின்னல் பொறியாகுதே….
கேள்விக்கு பதிலின்றி மனம் வாடுதே
கேலிக்கையாகி வாழ்வோடுதே …..
சதியென்று புதிராடி உறவாடுதே
சாவதை தேடியே மனம் ஓடுதே ….
இதுவென்ன வாழ்வா மனம் பேசுதே
இனியென்ன வாழ்வோ உயிர் கூசுதே
கண்ணீர்க்கு சொந்தம் யாரானதோ ..?
கை கூப்பி கும்பிட்டேன் எனை கொன்றிடு ….!
வன்னி மைந்தன் – (ஜெகன்-T )
ஆக்கம் -03,05,2017
உயிர் பலியை தடுப்பது யார் …?
உயிர் பலியை தடுப்பது யார் …?
உயிர் குடிக்க தானே இந்த போர் நடக்குது
உலகம் எல்லாம் கூடி தானே பலி எடுக்குது …
பேச்சு மேசை ஒன்றும் இங்கே பேசவில்லையோ ..?- இந்த
பேரழிவு தடுக்கத்தானே கூடவில்லையோ ..?
ஆட்சியிலே உள்ள கதிரை ஆடவில்லையோ ..?
அதி காரம் தந்த மக்கள் காணவில்லையோ ..?
நீளும் இந்த போருக்குகிங்கு முடிவு இல்லையோ ..?
நின் மதியாக வாழும் நிலை தோன்ற கூடுமோ ..?
ஆடும் இந்த ஆட்டத்திலே ஏது தோன்றுமோ ..?
அழிந்த பின்னர் மாந்தர் இங்கே ஏது தேறுமோ ..?
காக்கும் ஆட்சி கண்ணை மூடி உறங்கலாகுமோ ..?
கள பலிகள் தடுக்கா ஆட்சி தேவையாகுமோ ..?
உயிர் பலியை தடுப்பது யார் …?
வலிகளாலே விழிகளும் நீரை கொட்டுதே
வந்து வெடிக்கும் கணைகளும் உயிரை தட்டுதே …
வாழும் இந்த வாழ்க்கையிலே ஏது மிஞ்சுமோ ..?
வழி காட்டும் உயர் மனிதமும் வீழ்ந்து போனதோ ..?
செய்தி செல்லும் ஊடகங்கள் செவிகள் இல்லையோ ..?
செய்து வைத்த அரசியலே சதிகள் கொல்லுமோ..?
ஓர் உலகாய் வாழும் மக்கள் உயிர்கள் இல்லையா ..?
ஒருவன் மாறி ஒருவர் அழித்தால் உலகு மிஞ்சுமா ..?
- வன்னி மைந்தன் -( ஜெகன் )
அக்கம் -06-03-2017
உன்னால் சாகிறேன் …கலங்காதே ….!
உன்னால் சாகிறேன் …கலங்காதே ….!
முட்டி விட்ட உன் நினைப்பில்
மூழ்குதடி என் துடிப்பு …
விட்டு உயிர் போயிடவா..? – நெஞ்சே
விடை என்ன சொல்லி விடு ….
சுற்றி உன்னை வந்ததினால் – என்னை
சுட்டு விட்டு எங்கொளிந்தாய் …?- காற்றாய்
தட்டுகிறேன் உன் மேனி
தடவி என்னை போயிடுவாய் ….
பறந்திடவா எனை படர்ந்தாய் ..?- காதல்
பட்டிடவா எனை தொடர்ந்தாய் ..?
விட்டு விட துடிப்பதென்ன …? – இந்த
விடுதலைக்கு பிறப்பென்ன …?
சொல்லிடுவாய் ஒரு வரியில் – என்னை
கொன்றிடுவாய் ஒரு நொடியில் ..
ஈர்ப்பின்றி போனவளே – என்
இறப்பை எண்ணி கலங்காதே..!
- வன்னி மைந்தன் -( ஜெகன் )
ஆக்கம் -18/01/2017






