வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு

வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் விட்ட இடத்தில் காணப்படவில்லை.

அப் பகுதியில் தேடிய போதும் மோட்டர் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, மோட்டர் சைக்கிள்களை பொது இடங்களில், வீதியோரங்களில் நிறுத்தி விட்டு தூர பயணங்களை மேற்கொள்ளாது அதனை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுமாறு வவுனியா பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்

பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்

பொலிசாருக்கு பயந்து வாழைசேனை ஓட்டமாவடி பகுதி வழியாக வேகமாக தலைக்கவசம் இன்றி மோட்டர் சைக்கிள் ஓடி வந்த நபர் ,பொலிசாருக்கு ஆற்றில் மோட்டர் சைக்கிளுடன் பாய்ந்தார் .

பொலிசாருக்கு பயந்து வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் சாரதியின் கட்டு பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் பாய்ந்தார் .

உடனே விபத்தை கண்ணுற்ற பொலிசார் அவரை கைப்பற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர் .

அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை மீறி செயல் பட்ட காரணத்தால் ,இவ்விதம் மோட்டர் சைக்க்கிள் மற்றும் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்ற்றமை குறிப்பிட தக்கது .