Tag: மூளை
மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு
மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு
மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு ,மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்
குறித்த குடும்பஸ்தர் திடீர் உடல்நல குறைவு காரணமாக நேற்று புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
பிரதேச பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவர்கள் மூளை குழம்பியவர்கள் சஜித்
இவர்கள் மூளை குழம்பியவர்கள் சஜித் ,பஸ்களை வழங்கும் போது பஸ் மேன் என பெயர் சூட்டி அழைக்கின்றனர்.
இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதோருக்கு இவ்வாறு பகிர்ந்து வருவதில் தவறில்லை.
உலகம் சுற்றி வந்த மூளை
இவ்வாறு விமர்சிப்பவர்கள் உலகம் சுற்றி வந்து அவர்களின் மூளை குழம்பிப்போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் எந்தளவு முக்கியமானது என்பது தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது, ’மூச்சு’ திட்டத்தின் கீழ் நாட்டுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது 150 இலட்சம் ரூபா பெறுமதியான இருதய நோயாளர்களுக்கான மருந்தை அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அந்த மருந்தை நாட்டுக்கு பெற்றுக் கொடுத்தேன்.
76 வருட வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கல்விக்கு முன்னுரிமை அளிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியக் கொள்கைகளில் பிரதானமானது. இதற்கு எம்மிடம் நிறைய வேலைத்திட்டங்கள் இருக்கின்றன.
சமூக வலைத்தளங்கள்
இவற்றைக் கூறும் போது, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, பல்வேறு விதமாக மக்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கி, 220 இலட்சம் மக்களை மீண்டும் 2019 போல் ஏமாற்றும் முயற்சி இடம்பெற்று வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதுபோன்ற ஏமாற்று வேலைகளை செய்யாமல், போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு உதவவும், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவவும் ஒன்று சேருமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இதன் மூலம் நாட்டு மக்கள் நன்மையடைவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
76 ஆண்டு கால வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் நாட்டிற்காக சேவை செய்த ஒரே எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே என்றும், மக்கள் கோரும்
முறைமையில் மாற்றத்தைக் கூட போராட்டத்திற்கு முன்னரே ஐக்கிய மக்கள் சக்தியால் ஆரம்பிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டம்
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 200 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்
அனுராதபுரம், கெக்கிராவ, பலாகல, மனேருவ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 25 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரபஞ்சம் 200 ஆவது கட்டத்தையும் தாண்டி விட்டது. இதன் பெருமை எனக்கு மட்டும் சொந்தமானதல்ல,
மொனராகலை மாவட்டத்தில்
2021 டிசம்பர் 30 ஆம் திகதி அன்று மொனராகலை மாவட்டத்தில் உள்ள போதாகம வித்தியாலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் இந்தத் திட்டம், இன்று 200 ஆவது
கட்டத்தை எட்டியுள்ளது. எனக்கு மாத்திரமல்லாது, இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு பல வழிகளிலும் உழைத்து வரும், ஒத்துழைப்பு
வழங்கிய, வழங்கி வரும் அனைவருக்கும் இதன் பெருமையும் பாராட்டும் சேர வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
Featured
மூளைசாலியால் எந்தப் பயனும் இல்லை
மூளைசாலியால் எந்தப் பயனும் இல்லை
நல்ல மூளைசாலி, சிறந்த சர்வதேச தொடர்புள்ளவர் என நியமித்த நாட்டின் தலைவரால் சர்வதேசத்திலிருந்து ஒரு டொலரைக் கூட மேலதிகமாக நாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை,, சகல பொருட்களும் கடனாகவே பெறப்பட்டது ,மனிதாபிமான உதவிகளாகவே கிடைத்தன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
”அஸ்வெசும திட்டத்தைக்கூட முட்டாள்தனமான முறையில் செயல்படுத்தினார்கள்.குடும்ப அலகின் வருமான செலவினம் அடங்கலான சனத்தொகை கணக்கெடுப்பே முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் அது அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை,
இதன் காரணமாக உலக வங்கியில் இருந்து பெறப்பட்ட பணம் எந்த அறிவியல் பின்புலமும் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட்டது .இதன் பின்னரே தற்போது சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மூளைசாலியால் எந்தப் பயனும் இல்லை
”இந்நாடு நல்ல பாதையில் செல்ல முடியும் என்றாலும்,எடுக்கும் ஒவ்வொரு எட்டும் ஆதாரம் மற்றும் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக செய்யப்பட வேண்டும், அவ்வாறின்றி நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது, மாற்று அணி என்று கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் உலகம் பூராகவும் திரிந்து, ஐக்கிய மக்கள் சக்தி செயல்படுத்தும் நேர்மறையான திட்டங்களுக்கு சேறு பூசும் நடவடிக்கையை மட்டும்தான் செய்து வருகின்றனர்,
ஐக்கிய மக்கள் சக்தி தற்போது நாட்டிற்கு தேவையான டொலர்களை கொண்டு வரும் நிலையான வேலைத்திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
”ஸ்மார்ட் வகுப்பறை என்பது மனித மூலதனத்தை கட்டியெழுப்புவதற்கான முதலீடு ,நாட்டின் 41 இலட்சம் மாணவர் தலைமுறை அறிவாற்றலுடன்,நல்ல திறன்கள் மற்றும் ஆளுமைகள் கொண்ட மனித வளக் குழுவாக இதனால் உருவாக்கப்படும். உலகத் தரத்திலான திறன்களை வழங்குவதன் மூலம், தேசிய மற்றும் சர்வதேச தொழிலாளர் சந்தையில் அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைக்குச் செல்ல முடியும் .
சில அரசியல்வாதிகளுக்கு ஸ்மார்ட் நாடு என்பது வெறும் வார்த்தையாகவே மட்டும் உள்ளது,ஸ்மார்ட் நாடு என்றால் ஸ்மார்ட் கல்வி,ஸ்மார்ட் மாணவர்கள், ஸ்மார்ட் இளைஞர்கள் மற்றும் ஸ்மார்ட் குடிமக்கள் இருக்க வேண்டும் என்றும், இதனால் குறுகிய மனப்பான்மை உள்ள குடிமகனே உருவாகுவான்” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்
- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது
- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம்
- இஸ்ரேலிய காவலில் உள்ள நாற்பத்தி நான்கு ஸ்பானிய ஆர்வலர்கள்
- எபோலா நோய் மரணம் அதிகரிப்பு
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை
- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி
- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

























