Tag: இல்லை
எரிவாயு பற்றாக்குறை இல்லை
எரிவாயு பற்றாக்குறை இல்லை
எரிவாயு பற்றாக்குறை இல்லை உள்நாட்டு எரிவாயு பற்றாக்குறை இல்லை என்று LITRO உறுதியளிக்கிறது.
உள்நாட்டு எரிவாயு பற்றாக்குறை
உள்நாட்டு எரிவாயு பற்றாக்குறை இல்லை என்றும், தேசிய தேவையை பூர்த்தி செய்ய நிறுவனம் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதாகவும்
உறுதியளித்து, பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று LITRO எரிவாயு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
விநியோகம் தடையின்றி தொடர்வதாகவும், சில பகுதிகளில் குறைந்த அளவு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உள்ளூர் விநியோக தாமதங்கள்
காரணமாக இருக்கலாம் என்றும் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விநியோக சிக்கல்களை தாமதமின்றி தீர்க்கும் வகை
விநியோக சிக்கல்களை தாமதமின்றி தீர்க்கும் வகையில், அந்தந்த பகுதிகளில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால், அந்தந்த பகுதிகளில் ஏதேனும்
பற்றாக்குறை இருந்தால், உடனடியாக நிறுவனத்திற்கு தெரிவிக்குமாறு LITRO நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை ,தற்போது தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்னா தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சீனா நன்கொடை அளிக்கும் அதிகாரப்பூர்வ விழாவில் பங்கேற்று பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்தார்.
பாதாள உலகம் ஒருபோதும் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது அல்ல என்றும், அது பொது பாதுகாப்பு அமைச்சினால்
கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
“தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை. இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இங்கு வர முடிந்ததுதானே.
பாதாள உலகம் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது அல்ல. இது பொது பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
தேசிய பாதுகாப்புக்கும் பொலிஸாருக்கும் தேவையான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம். தேசிய பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை.
பாதாள உலகம் குழப்பத்தில் உள்ளது. பாதாள உலகம் குழப்பத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் பாதாள உலகம் அரசியல் பாதுகாப்பை இழந்துவிட்டது.
அதனால்தான் பாதாள உலகம் குழப்பத்தில் உள்ளது. பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
பொது பாதுகாப்பு அமைச்சு வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதற்கு சட்ட கட்டமைப்பிற்குள் நாங்கள் கட்டுப்பாடுகளை வழங்குகிறோம்.”
கேள்வி – நாள் தோறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாவது பாதாள உலகத்திற்கு அரசியல் பாதுகாப்பு இல்லாததால்தானா?
“ஆமாம், அதுவும் ஒரு காரணம்தான். பாதாள உலகத்திற்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
அதுதான் அவர்களுக்குத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றன. அப்படித்தான்.”
மூளைசாலியால் எந்தப் பயனும் இல்லை
மூளைசாலியால் எந்தப் பயனும் இல்லை
நல்ல மூளைசாலி, சிறந்த சர்வதேச தொடர்புள்ளவர் என நியமித்த நாட்டின் தலைவரால் சர்வதேசத்திலிருந்து ஒரு டொலரைக் கூட மேலதிகமாக நாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை,, சகல பொருட்களும் கடனாகவே பெறப்பட்டது ,மனிதாபிமான உதவிகளாகவே கிடைத்தன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
”அஸ்வெசும திட்டத்தைக்கூட முட்டாள்தனமான முறையில் செயல்படுத்தினார்கள்.குடும்ப அலகின் வருமான செலவினம் அடங்கலான சனத்தொகை கணக்கெடுப்பே முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் அது அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை,
இதன் காரணமாக உலக வங்கியில் இருந்து பெறப்பட்ட பணம் எந்த அறிவியல் பின்புலமும் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட்டது .இதன் பின்னரே தற்போது சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மூளைசாலியால் எந்தப் பயனும் இல்லை
”இந்நாடு நல்ல பாதையில் செல்ல முடியும் என்றாலும்,எடுக்கும் ஒவ்வொரு எட்டும் ஆதாரம் மற்றும் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக செய்யப்பட வேண்டும், அவ்வாறின்றி நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது, மாற்று அணி என்று கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் உலகம் பூராகவும் திரிந்து, ஐக்கிய மக்கள் சக்தி செயல்படுத்தும் நேர்மறையான திட்டங்களுக்கு சேறு பூசும் நடவடிக்கையை மட்டும்தான் செய்து வருகின்றனர்,
ஐக்கிய மக்கள் சக்தி தற்போது நாட்டிற்கு தேவையான டொலர்களை கொண்டு வரும் நிலையான வேலைத்திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
”ஸ்மார்ட் வகுப்பறை என்பது மனித மூலதனத்தை கட்டியெழுப்புவதற்கான முதலீடு ,நாட்டின் 41 இலட்சம் மாணவர் தலைமுறை அறிவாற்றலுடன்,நல்ல திறன்கள் மற்றும் ஆளுமைகள் கொண்ட மனித வளக் குழுவாக இதனால் உருவாக்கப்படும். உலகத் தரத்திலான திறன்களை வழங்குவதன் மூலம், தேசிய மற்றும் சர்வதேச தொழிலாளர் சந்தையில் அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைக்குச் செல்ல முடியும் .
சில அரசியல்வாதிகளுக்கு ஸ்மார்ட் நாடு என்பது வெறும் வார்த்தையாகவே மட்டும் உள்ளது,ஸ்மார்ட் நாடு என்றால் ஸ்மார்ட் கல்வி,ஸ்மார்ட் மாணவர்கள், ஸ்மார்ட் இளைஞர்கள் மற்றும் ஸ்மார்ட் குடிமக்கள் இருக்க வேண்டும் என்றும், இதனால் குறுகிய மனப்பான்மை உள்ள குடிமகனே உருவாகுவான்” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது
- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது
- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு
- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது
















