Tag: மின் கட்டணம்
இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பு
இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பு
இலங்கை மின்சார சபை இன்று (20) முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்டணமானது ஒக்டோபர் 20, 2023 முதல் ஜூன் 30, 2024 வரை அமுலில் இருக்கும்.
இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பு
மின் கட்டணத்தை 18 சதவீதம் உயர்த்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வருடத்தில் இவ்வாறு மின் கட்டணம் உயர்த்ப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.
ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்களின் மேல் மேலும் சுமையை சுமத்தும் வகையில் இந்த மின் கட்டண அதிகரிப்பு காணப்படுகின்றது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை
- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி
- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை
2000 மடங்காக உயரும் மின் கட்டணம்
2000 மடங்காக உயரும் மின் கட்டணம்
நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்துத் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர், நுகர்வோருக்கு 0 முதல் 30 அலகுகள் வரை மின்சாரக் கட்டணத்தை நூற்றுக்கு 2000 மடங்காக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க,
“நாளை அமைச்சரவைக்கு செல்லும் மின்சாரத் திருத்தத்தின் சில அளவீடுகளை நேற்று ஆய்வு செய்தேன். இதில், 0-30, 31-61, 61-90 மற்றும் 91-120 அலகுகளுக்கு இடையில் நுகர்வோரின் மின் கட்டணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயம் இல்லை என
2000 மடங்காக உயரும் மின் கட்டணம்
நினைக்கிறேன்.இதில் 0-30 அலகுகளுக்கு இடையிலான மின்சாரக் கட்டணத்தை 2003 மடங்காக அதிகரிக்க முன்மொழியப்பட்டது.
இலங்கையில் சுமார் 50 லட்சம் பேர் 90க்கும் குறைவான அலகுகளை பயன்படுத்துபவர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர்களின் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால், இந்த சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதை நாம் அறிவோம். 0-30க்கு இடையில் நூற்றுக்கு 2000 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
31-60க்கு இடைப்பட்ட 120 அலகுகளுக்கு குறைவாகப் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோரிடமிருந்தும் அடுத்த ஆண்டு சுமார் 80 பில்லியன் கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்காக இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது நியாயமற்ற பிரேரணையாக இருப்பதால், தற்போதைய நிலையில் இலங்கை மின்சார சபை கடந்த 4 மாதங்கள் மற்றும் இந்த மாதம் உட்பட செயல்பாட்டு இலாபத்தை ஈட்டுகிறது.

















