அமானுஷ்யமான சத்தத்தால் மக்கள் பீதி
Posted in இலங்கை செய்திகள்

அமானுஷ்யமான சத்தத்தால் மக்கள் பீதி

அமானுஷ்யமான சத்தத்தால் மக்கள் பீதி

மனிதத் தொடர்பு இல்லாத, மனிதப் புலன்களுக்கு அப்பாற்பட்ட, மனித சக்திக்கு மீறியதே அமானுஷ்யமாகும்.

அவ்வாறு நிலத்தின் கீழ் அமானுஷ்யமான சத்தம் கேட்பதால் மக்கள் அச்சத்துடன் இருக்கவேண்டிய நிலைமை நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் நீர் செல்வது உட்பட பல்வேறு விதமான அமானுஷ்யமான சத்தம் கேட்பதாக கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலுக்கு அமைய அக்கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் மட்டும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க

ஞாயிற்றுக்கிழமை ( 15) முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

அமானுஷ்யமான சத்தத்தால் மக்கள் பீதி

கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் வாழும் மக்கள் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.

இந்த கிராமமானது மலைகள் அற்ற ஒரு சமவெளிப் பகுதியில் கொத்மலை நீர்தேக்கத்திற்கு அருகிலும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்த நுவரெலியா

மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அங்கு வழமையாக நிலத்துக்கு கீழ் இருந்து பல்வேறு சத்தங்கள் கேட்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.

இந்நிலைமையானது அச்சப்படுவதற்கான காரணியாக இதுவரை அடையாளம் எதுவும் காணப்படவில்லை. எனவும், எனினும் நுவரெலியா

மாவட்ட கட்டிடம் மற்றும் நிலம் ஆய்வு மைய அதிகாரிகளின் உதவியோடு குறித்த கிராமம் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க ந‌டவடிக்க எடுக்கப்படவுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மேலும் தெரிவித்தார்.

TikTok செயல் இழப்பு மக்கள் பீதி
Posted in உலக செய்திகள்

TikTok செயல் இழப்பு மக்கள் பீதி

TikTok செயல் இழப்பு மக்கள் பீதி


சமூக வலைத்தளங்களில் முதன்மையன ஒன்றாக விளங்கி வருவது TikTok ஆகும் .

அவ்விதமான TikTok இன்று புதன் கிழமை மதியம் மூன்று மணியளவில் செயல் இழந்தது . 56 வீதமான பாவனையாளர்கள் உள்நுழைய முடியா தொழில் நுட்ப கோளாறுக்கு உள்ளாகினர் .

ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தடையாக இவை பார்க்க படுகிறது .

தற்போது ஏற்பட்ட தவறு சீர் திருத்த பட்டு வழமைக்கு சென்றுள்ளதாக TikTok நிறுவனம் அறிவித்துள்ளது .

உலக புகழ் பெற்ற பல தமிழர்கள் TikTok வாயிலாக திடிர் செல்வந்தர்களாகவும் ,நடிகர்களாகவும் மாறியுள்ளனர் .

அவ்விதமான சீனா நிறுவனத்தின் TikTok செயல் இழந்த செயல் ,
பாவனையாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது.