Tag: பேருந்து
பேருந்து விபத்தில் பலர் காயம்
பேருந்து விபத்தில் பலர் காயம்
வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
வெலிகந்த சிங்கபுர வீதியில் 8 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து சாரதிக்கு பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 75 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து விபத்தில் பலர் காயம்
தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா
பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா
பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
யாழில் கவிழ்ந்த பேருந்து விபத்து
யாழில் கவிழ்ந்த பேருந்து விபத்து
கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை
- பேருந்து மோதி ஒருவர் பலி
- தடம் புரண்ட ரயில்
- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்
இரு பேருந்து மோதி விபத்து பலர் படுகாயம்
இரு பேருந்து மோதி விபத்து பலர் படுகாயம்
பேருவலையில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி – கொழும்பு நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் ஒன்றும், கொழும்பு – கதிர்காமம் நகரங்களுக்கு இடையில்
சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதுண்டுள்ளன.
விபத்தில் காயமடைந்த 6 பேர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி
மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி
மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற விபத்தில் குறித்த பஸ் உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தைப் பெறாமல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி
மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி
ND7804 இலக்கம் கொண்ட குறித்த பஸ் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தை பெற்றிருக்கவில்லை.
கிழக்கு மாகாண சபையால் , 2018ஆம் ஆண்டு குறித்த பேரூந்துக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திர உரிமையாளருக்கு இதற்கு முன்னரும் நீதிமன்றத்தில் 10 000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை செலுத்திய பின்னரும் அவர் இவ்வாறான தவறை இழைத்துள்ளார் என்று தெரிவித்தார்
பேருந்து கட்டணம் குறைப்பு
பேருந்து கட்டணம் குறைப்பு
அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணத்தை குறைக்க தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 10 சதவீதத்தினால் பேருந்து கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளத்தில் பாய்ந்த பேருந்து
பள்ளத்தில் பாய்ந்த பேருந்து
ஹட்டன், சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று (08) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சலங்கந்தை பஸ் தரிப்பிடத்துக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இயந்திரகோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.
பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.
குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 39, 46, 53 வயதுடைய கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில்
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கராஜ மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக
விசாரணைகளுக்காக மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு
அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு
அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்துகொள்வதற்கான திட்டத்திற்கு பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் அரசுப் பேருந்துகளில் மாநிலத்திற்குள்ளாகவே பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் சட்டத்திற்கு இன்று பஞ்சாப் பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தனது டுவிட்டரில் கூறியதாவது:-
அமைச்சரவையில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் ஏப்ரல் 1 முதல் மாநிலத்திற்குள்ளாகவே பெண்கள் மற்றும்
மாணவிகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். பஞ்சாப் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய அழுத்தமான முயற்சியாக இது அமையும் என்று பதிவிட்டுள்ளார்






























