Tag: தேடி வருவேன் காத்திரு
தேடி வருவேன் காத்திரு
தேடி வருவேன் காத்திரு
இருந்தால் வருவேன் இதயம் தருவேன்
இன்றே கொஞ்சம் பொறுத்திடு …..
நாளை மலரும் வேளை ஒன்று
நமக்காய் மலரும் காத்திரு …..
வலிகள் வந்து இடையில் வீழ்ந்தால்
வாழ்வை விட்டு ஒழிவதா…?
கால பிழையால் கசங்கிய வாழ்வை
கண்ணீர் தூவி சுமப்பதா …?
ஒரு நாள் மலரும் திரு நாள் ஒன்றில்
ஓலம் ஓங்கி மறையும் …
ஓடியே வீழ்ந்த வலிகள் எல்லாம்
ஒரு நொடி அங்கே சிதறும் …
நடக்கும் கால நிகழ்வுகள் எல்லாம்
நல்லதே என்றே நம்பு …
நாளை சிறக்கும் வாழ்விற்கிது
நம்பிக்கை தரும் கொம்பு ….!
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -29/03/2018 - வன்னி மைந்தன் கவிதைகள்
உன்னை தேடி வருவேன் காத்திரு
உன்னை தேடி வருவேன் காத்திரு
விழுந்து விழுந்து நீ பேசும்
விடயங்களை இரசிக்கிறேன் …
விடலையில நான் தொலைத்த
விடயங்களை ருசிக்கிறேன்….
மூச்சு வாங்கி பேசும் உந்தன்
முன்னழகு பிடிச்சிருக்கே …
காற்று வந்து ஆடை விலக்கி
காட்டும் மேனி பிடிச்சிருக்கே ….
தடக்கி விழும் வார்த்தைகளின்
தடையங்களை முகர்கிறேன்
தனிமையதை தேடும் உந்தன்
தாகமதால் துடிக்கிறேன் ….
மேனி களைத்து உடல் வேர்த்து
மோகத்தாலே துடிக்கிறாய் ..
வெள்ளி நிலா ஓடிவர
வேகம் பிடிக்க நினைக்கிறாய் ….
தேகம் வேர்க்கும் வேலை வரும்
தேவதையே பொறுத்திருப்பாய்
தேடி வந்த பணி முடித்து
தேடி வருவேன் காத்திருப்பாய் ….!
வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் -25,08,2017
வன்னி மைந்தன் கவிதைகள்






