Tag: துருக்கி விமானம்
துருக்கி விமானம் இலங்கையில் தரையிறக்கம் தப்பிய பயணிகள்
துருக்கி விமானம் இலங்கையில் தரையிறக்கம் தப்பிய பயணிகள்
துருக்கி விமானம் இலங்கையில் தரையிறக்கம் தப்பிய பயணிகள் ,துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் BIA-வில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
நேற்று இரவு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) துருக்கிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று
தரையிறங்கும் கியர் கோளாறு குறித்து புகார் அளித்ததை அடுத்து பாதுகாப்பாக தரையிறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இஸ்தான்புல்லுக்கு இயக்கப்படும் TK-733 விமானம், 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட
தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு
சிறிது நேரத்திலேயே அதன் தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் விளைவாக, BIA-வில் ஓடுபாதை அவசர தரையிறக்கத்திற்குத்
தயாராக இருந்தது, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருந்தன.
இந்த செயலிழப்பைத் தொடர்ந்து, தரையிறங்கும் போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க விமானி கடலில் முன்னெச்சரிக்கை எரிபொருள் நிரப்புதலை மேற்கொண்டார்.
விமானம் இறுதியில் BIA-வில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இருப்பினும், இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்திலிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட பிற விமானங்கள் தாமதங்களை சந்தித்தன.
விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு கொண்டு
செல்லப்படுவதாகவும், விமானத்தை பழுதுபார்ப்பதற்காக நகர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பாளர் மேலும் தெரிவித்தார்.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
வடக்கு சிரியாவில் அலெப்போ பகுதிகளில் அமைந்துள்ள ,சிரியா இராணுவத்தின் , முன்னரங்க நிலைகள் மீது, துருக்கிய இராணுவ போர் விமானங்கள் ,அகோர வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன .
துருக்கி போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் டசின் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
மேலும் துருக்கி விமானங்களின் தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் படுகாயமடைந்து உள்ளத்துடன் ,குறித்த இராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்த்துள்ளன.
சிரியா நாட்டின் வடக்கு பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் ,பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
ஐம்பதயிரம் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுஉள்ளனர்.
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி இராணுவ குழுக்கள், மற்றும் துருக்கி இராணுவம் என்பன ,சம வேளையில் விமான ஆதரவு தாக்குதல்களை, நடத்திய வண்ணம் உள்ளனர்.
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
பத்து ஆண்டுகளாக ,சிரியா நாட்டின் மீது ,பல் நாட்டு ,கூட்டு படைகள், தொடர் இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்.
இந்த இராணுவ தாக்குதல்ககளில் , சிக்கி இதுவரை ,இரண்டு லட்சம் சிரியா மக்கள் பலியாகியுள்ளனர்.
மேலும். முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள். சிரியாவை விட்டு .அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
சிரியா நாடு எங்கும் சுடு காடாக காட்சியளிக்கிறது .
முக்கிய பழைமை வாய்ந்த புராதன நகரங்கள் , என்பன குண்டுகளின் தாக்குதலில் சிக்கி இடிந்துள்ளன.
மிக பெரும் பெரும் , வரலாற்று பெருமை கொண்ட ,பகுதிகளும் சுடுகாடாக காட்சியளிக்கிறது .
பல் நாட்டு இராணுவத்தினரின் ,கூட்டிணைந்த தாக்குதல் ஊடாக ,அழகிய சிரியா நாடு இன்று அழகிழந்து தவிக்கிறது.
சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்துள்ளது .
சிரியாவின் வடக்கு பகுதிகளில் குருதீஸ் போராளிகள் ,தமது தாயகம் கோரி போராடி வருகின்றனர்.
அவ்வாறான எல்லை பகுதிகள் மீது துருக்கி இராணுவம், பெரும் தாக்குதலை தற்போது நடத்திய வண்ணம் உள்ளது .
குருதீஸ் போராளிகளை ,முற்றாக அழிக்கும், துடைத்தழிப்பு ,தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ,சிரியா இராணுவத்தின் நிலைகள் மீதும் விமான தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
அரேபிய நாடுகளில் ,குட்டி அமெரிக்காவாக ,துருக்கி தன்னை அடையாள படுத்தி ,அடக்குமுறை இராணுவ வன்முறை தாக்குதல்களை மேற் கொள்கின்றமை குறிப்பிட தக்கது .









