துப்பாக்கிச்சூடு சந்தேக நபர் தப்பியோட்டம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூடு சந்தேக நபர் தப்பியோட்டம்

துப்பாக்கிச்சூடு சந்தேக நபர் தப்பியோட்டம்

துப்பாக்கிச்சூடு சந்தேக நபர் தப்பியோட்டம் ,பாணந்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர், இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திலிருந்து இன்று (30) காலை தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறை

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர், நேற்று (29) இரவு இரத்தினபுரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இன்று காலை 7:03 மணியளவில், பொலிஸ் அதிகாரி கழிப்பறைக்குச் செல்ல கதவைத் திறந்தபோது, தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி, அங்கம்மன பகுதியைச் சேர்ந்த இவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

குறித்த சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம் ,கிரிபத்கொட பகுதியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்திற்கு போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள்

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவைக் கைது செய்ய, களனியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, ​​அவர் தனது வீட்டை விட்டு ஓடிவிட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று பிரசன்ன ரணவீரவைக் கைது செய்யச் சென்றிருந்தது.

அந்த நேரத்தில் பிரசன்ன ரணவீரவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்ததாகவும், குற்றப் புலனாய்வுத் துறையினர் அவரது

மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், பின்னர் ரணவீரவின் சாரதியிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிக்கு போலியான பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் களனி பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

5 சிறுமிகள் தப்பியோட்டம்
Posted in இலங்கை செய்திகள்

5 சிறுமிகள் தப்பியோட்டம்

5 சிறுமிகள் தப்பியோட்டம்

மெட்டியகொட பிரதேசத்தில் சிறுவர் இல்லமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக மெட்டியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஐந்து சிறுமிகளும் ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளதாகவும் மெட்டியகொட பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தப்பியோடிய 17, 14 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் படபொல, கொழும்பு, ஹிக்கடுவ, எல்பிட்டிய மற்றும் நெலுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பியோடிய சிறுமிகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

வீடியோ

வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டம்

கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டம்

தனியார் வகுப்புக்கு செல்வதற்காக, ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவ​னின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய இனந்தெரியாத நபர் அம்மாணவன் கொண்டுச் சென்ற பையை, அபகரித்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் மீரிகமவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.

மீரிகம பஸ் நிலையத்துக்கு பஸ்ஸில் வந்த இந்த மாணவன், மற்றுமொரு மாணவனுடன், ரயில் தண்டவாளத்தில் வில்வத்த திசையை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அதன்​போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்தார்.

கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டம்

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவ்விரு மாணவர்களுக்கும் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அலைபேசியை பார்த்துக்கொண்டு பயணித்தமையால், நடந்த சம்பவத்தை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

எனினும், முன்பாக பயணித்த இருவர் சத்தபோட்டதை அடுத்து திடீரென பார்த்தபோது, வில்வத்த ரயில் கடவை பக்கமாக ஒருவர் ஓடிகொண்டிருப்பதை கண்டுள்ளனர்.

அபகரிக்கப்பட்ட பை, அப்பிரதேசத்தில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in சீமான் பேச்சு

போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை சீமான்

போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை சீமான்

இலங்கையில் கோட்டபாய தோற்றது ஏன் அவர்களை மக்கள் விரட்டுவது ஏன்

.இதே நிலை இந்தியாவுக்கு வந்துவிட கூடாது ஏன் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

இலங்கை ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டு துரத்தியதன் பின்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சி மேற்கொண்ட நேரலையில் சீமான் இந்த விடயம் தொடர்பாக உரையாடினார் .

இதில் அழுத்தி காணொளி பார்க்கலாம்