Tag: செல்ஃபி
உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே வாகன விபத்தில் உயிரிழந்தார்.
திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளதுடன், புகைப்படம் எடுத்தவர் தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை
திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய
சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி
சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி
யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார் – 2023 ஞாயிற்றுக்கிழமை (16) இரண்டாவது நாளாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றது.
சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி
இந்நிகழ்விற்கு விருந்தினராக சனத் ஜயசூரிய கலந்து கொண்டுள்ளார்.அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் யுவதிகள் அரச ஊழியர்கள் என பலரும் முண்டியடித்தை அவதானிக்க முடிந்தது.
இதன்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் உடனிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.



















