Tag: கோடரி
மது போதையில் கோடரி தாக்குதலில் மனைவி மரணம் கணவன் படுகாயம்
மது போதையில் கோடரி தாக்குதலில் மனைவி மரணம் கணவன் படுகாயம்
திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 85ம் கட்டைப் பகுதியில் நபர் ஒருவர் மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கந்தளய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (29) 8.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
அக்போபுர 85 ஆம் கட்டைப் பகுதியில் குறித்த நபர் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த வேலை, குறித்த நபரின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட குறித்த நபர் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ள நிலையில் கணவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிரோமாலா பெர்ணாந்து (44வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க (54வயது) என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையை கோடரியால் வெட்டி கொன்ற மகன்
தந்தையை கோடரியால் வெட்டி கொன்ற மகன்
மகனின் கோடரி தாக்குதில், தந்தை மரணமடைந்த சம்பவம், காலி பிடிகல களுஆராச்சிகொட பகுதியில் சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது என பிடிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பிட்டிகல களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பியதாச ஜயசிங்க வயது(73) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலை மேற்கொண்ட மகனை நீதிமன்றில் ஆஜரப்படுத்தவுள்ளதாக (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோடரியால் தலையில் அடித்து கொலை
கோடரியால் தலையில் அடித்து கொலை
மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச்
சென்றேன் என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை (22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது – 72) என்ற வயோதிப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் டில்ரொக் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ தினத்தன்று அண்மையிலுள்ள சிசிரிவி கெமரா பதிவில் கொலையாளி துவிச்சக்கர வண்டியில் பயணித்தமை பதிவாகி இருந்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் நேற்று காலை இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், வயோதிபப் பெண்ணின் வீட்டில் முதல் நாள் பூக்கன்றுகளை வெட்டி வேலை செய்தேன். மறுநாள் மிகுதி வேலையை செய்யுமாறு கேட்டிருந்தார்.
மறுநாள் சென்ற போது பட்டமரத்தை வெட்டுமாறு அயலில் உள்ள வீட்டில் கோடாரி மண்வெட்டியை வயோதிப் பெண் வாங்கித்தந்தார்.
எனது மனைவிக்கு மோட்டார் சைக்கிள் லீசிங்கில் வாங்கிக் கொடுத்தேன். அதற்கான பணத்தை உறவினரிடம் வாங்கிக் கட்டியிருந்தேன். அவர் தன்னிடம் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளத் தருமாறு அடிக்கடி கேட்டார்.
அதனால் கோடாரியை எடுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வயோதிப் பெண்ணின் பின்னால் சென்று தலையில் தாக்கினேன். அவர் சுயநினைவற்றிருந்தார். அவரது சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்றுவிட்டேன் என்று தெரிவித்தார்.
அத்துடன் தனது வீட்டுக்கு பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் பை ஒன்றிலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி பொலிஸ் தடுப்பில் வைத்திருக்க பொலிஸார் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.
மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்
மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்
இலங்கை வாழைச்சேனை காவல்துறை பகுதியில் குடும்ப தகராறு காரணாமாக மனைவியை
விட்டு பிரிந்த கணவன் ,பெண்ணின் தாயார் வீடு புகுந்து அவரது தந்து ,மற்றும் தாயை
கோடரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்
இதில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர்
மேற்படி செயல் அந்த கிராம பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
தம்பதிகள் மீது கோடரியால் வெட்டிய பெண் – போலீசார் குவிப்பு
தம்பதிகள் மீது கோடரியால் வெட்டிய பெண் – போலீசார் குவிப்பு
அவுஸ்ரேலியா தென்மேற்கு பகுதியில் ஜோடிகள் மீது பெண் ஒருவர் திடீரென கோடாரியால் வெட்டியுள்ளார் .
இதில் 44 வயதுடைய கணவருக்கு துடையிலும் ,அவரது துணைவியாருக்கு தலையிலும் வெட்டு வீழ்ந்துள்ளது
தற்போது கொலை வெறி தாக்குதலை மேற்கொண்ட பெண் கைது செய்ய பட்டுள்ளார் ,இது
தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பாக பொலிசார் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை
,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது








