Tag: கொள்கலன்
இறக்குமதி கொள்கலன் நெரிசல்
இறக்குமதி கொள்கலன் நெரிசல்
இறக்குமதி கொள்கலன் நெரிசல் ,கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டிருந்த நெரிசல் இப்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
மேலதிக சுங்கப் பணிப்பாளர்
தற்போது இந்த நெரிசல் முற்றிலும் தீர்க்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நாட்கள் எடுக்க வேண்டியிருந்தாகவும், இறக்குமதி கொள்கலன்களின்
எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணம் என்றும் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு சுமார் 1,200 இறக்குமதி கொள்கலன்கள் வந்த நிலையில், சில நாட்களில் இது 2,900 ஆக உயர்ந்ததாகவும், இதனால் இறக்குமதி
கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நேரம்
கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நேரம் எடுக்க வேண்டியிருந்ததாகவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இன்று காலை நிலவரப்படி இந்த தாமதம் முற்றிலும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய அனைத்து கொள்கலன்களும் சுங்கத்தால்
அனுமதிக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட மேலும் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி ,கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை சுங்கம் ஒரு விசேட திட்டத்தை தொடங்கியுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்தார்.
நேற்றைய (13) நாளின் நிலவரப்படி, கொழும்பு துறைமுகத்திலிருந்து 459 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, RCT, கிரேலைன் 1 மற்றும் 2 பிரிவுகளில் இருந்து 242 கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன.
சுங்கத்துறை நாளொன்றுக்கு சுமார் 500 கொள்கலன்களை சோதனை செய்து விடுவிக்க முடியும் என்றாலும், அனுமதி வழங்கும் முகவர்கள் மற்றும் கொள்கலன் லொறி சாரதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் விடுவிக்கக்கூடிய கொள்கலன்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
இன்று (14) காலை நிலவரப்படி, நுழைவாயில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், 496 கொள்கலன்கள் துறைமுகத்தில் உள்ளன, ஆனால் இன்னும் சரக்கு சோதனை நிறைவடைந்து அவைகள் விடுவிக்கப்படவில்லை.
இன்று விடுமுறை நாளாக இருந்தாலும், சுங்கம் மற்றும் பிற தொடர்புடைய அரசு நிறுவனங்கள் கொள்கலன்களை விடுவிக்கும் பணியில் ஈடுபடும் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

















