Tag: கிரேவி
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி,கடைசுவையில் இட்லி தோசை சப்பாத்தி இந்த கிரேவி கூட செஞ்சு சாப்பிடுங்க செமையாக இருக்கும் .
இட்லி தோசை சப்பாத்திக்கு பக்காவான கிரேவி செய்வது எப்படி ..?

தோசை இட்லி சப்பாத்திக்கு பக்காவான வெங்காய கிரேவி இப்படி செஞ்சு பாருங்க ,இலகுவான முறையில மிகவும் சுவையான வெங்காய கிரேவி செய்யலாம் வாங்க .
வெங்காய கிரேவி செய்வதற்கு அடுப்பில கடாய வைத்து சூடாக்கி கொள்ளுங்க ,கடாய் சூடானதும் எண்ணெய் சேர்த்து சூடாக்குங்க .

அப்புறமா கடலை உளுந்து ,வெந்தயம் ,சீரகம் ,பூண்டு ,போட்டு நன்றாக கலக்கி வதக்குங்க ,வதங்குவது நான்கு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டி ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுங்க .
அடுப்பிடிக்காம வெங்காயத்தை வதக்கி எடுத்து மொநிறமா வந்ததும் சூடு தண்ணியில அரை மணி நேரம் வறுமிளகாய் ஊற வைத்து அதை எடுத்து இப்போ இதோடு சேர்த்து வதக்கிடுங்க .
10 வறு மிளகாய் கூட சின்ன துண்டு புளி சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .வேகியதும் இப்போ அடுப்பை அணைத்து அதனை ஆற வைத்திடுங்க .
வெங்காய கிரேவி செய்முறை இரண்டு
இப்போ அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .இப்போ மீள அடுப்பில கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டி கடுகு ,உளுந்து ,பெருங்காய தூள் ,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொரிந்தது வதங்கி வந்ததும் , அரைத்து வைத்தவற்றை இப்போ இதில சேர்த்து கலக்கி விடுங்க .

இப்போ இது கூடவே ஒரு கரண்டி நாட்டு சக்கரை சேர்த்திடுங்க ,இதன் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி கலக்கி எடுங்க .
நன்றாக வதக்கி எடுத்த பின்னர் நிறம் மாறியதும் அடுப்பில இருந்து வெங்காய கிரேவியை இறக்கிடுங்க .
ஆறியதும் ,போத்தலில் அடைத்து வைத்து இந்த வெங்காய கிரேவியை இட்லி தோசை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுங்க .

நீங்க விரும்பும் நேரம் மூன்று மாதம் வரை வைத்து சாப்பிட முடியும் .
மிகவும் இலகுவான முறையில் கடை சுவையில் வீட்டில் ,இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய கிரேவி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .
அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி
அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி
நம்ம வீடுகளில் அவசர நேரத்தில் காய்கறிகள் இல்லாத நேரத்தில ,இது போன்ற உணவுகளை உடனடியாக செய்து சாப்பிடுங்க மக்களே .
இந்த கிரேவி செய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்டாக என்ன .?
வாங்க கிரேவி செய்முறைக்குள் போகலாம் .
இந்த கிரேவி செய்திட முதல்ல அடுப்பில கடாய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்க .

அப்புறமா இரண்டு பிரிஞ்சி இலை ,ஏலக்காய் ,கராம்பு ,பட்டை ,ஒரு கருப்பு ஏலக்காய் ,ஒரு கரண்டி சீரகம் ,மீளக்கு சேர்த்து வதக்கி கொள்ளுங்க .
அதன் பின்னர் வெட்டி வைத்த ஒருகிலோ தக்காளி சேர்த்திருங்க ,சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்திடுங்க.
இரண்டு கரண்டி எள்ளு ,முந்திரி பருப்பு ஒரு கைப்பிடி ,சேர்த்து வதக்கி வாங்க .இப்போ அடுப்பை நிறுத்தி ,ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்திருங்க .இப்போ இதில கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்திடுங்க .
அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி
இப்போ கடாய் சூடாக்கி அதில இரண்டு கரண்டி நெய் ,எண்ணெய் சேர்த்திடுங்க .கூடவே அரை கரண்டி மஞ்சள் ,சீராக தூள் ,கரம் மசாலா ,மூணு கரண்டி மிளகாய் தூள் ,நான்கு கரண்டி மல்லி தூள் ,பெருங்காய தூள் ,கஸ்தூரி மேவி .சேர்க்க கலந்திருங்க.
நன்றாக சூடாக்கி வதங்கிய பின்னர் ,அரைத்து வைத்தவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணிடுங்க .
மூடி போட்டு மூடி 10 நிமிடம் வரை வேக வைத்திடுங்க .
இப்போ கிரேவி ரெடியாகிடிச்சு ,இதை போத்தலில் அடைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்து ஒருமாதம் வரை வைத்து சாப்பிடலாம் .
அவ்வளவு தானாக வேலை .




































