சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி
Posted in உலக செய்திகள்

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி ,சீமான் வீடு தோறும் அரசியல் அறிவை கொண்டு சேர்த்ததுன்னு சொன்னா அது வந்து நம்முடைய தாண்டா ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸோ டிஎம்கேவும் ஏடிஎம்கேவும் இல்ல .

வீட்டுக்கு வீடு அவங்க வந்து அரசியலை கொண்டு போய் சேர்க்கல சின்னத்த கொண்டு போய் சேர்த்தார்கள் .

அரசியல் பகுத்தறிவு அரசியலில் கொண்டு போய் சேர்க்கலாம் ஒரு பர்சனாலிட்டி பெஸ்ட் அரசியல் தான் செய்றாங்க இவங்க மட்டும் தான் 40க்கு 20 பெண்களுக்கு உரிமை .

தமிழகத்தை சீமான் ஆள்வார் கஸ்தூரி

33% கொண்டு போய் ரீச் பண்றாங்க ,இளைஞர்கள் எல்லாரும் ஒரு மிகப்பெரிய அளவில் நாம் தமிழர் வரவேற்கிறார்கள் என்றால் ,அதற்கு காரணம் அவங்கள மதிச்சு போடுங்கம்மா ஓட்டு .

இந்த சின்னத்தை பார்த்து அப்படின்னு சொல்லாம, அவங்களை மதிச்சு எல்லாருக்கும் ,ஆன ஒரு அரசியலை பேசி அந்த, லாஜிக் எல்லாம் பேசி இதுக்கு முன்னாடி நீங்க பரப்புரையில கேட்டிருக்கீங்களா .

அதுக்கப்புறம் நம்முடைய கட்சி வாக்குறுதிகள் இருக்கும் அதுக்கப்புறம் பெண்களை கவரக்கூடிய கவர்ச்சிகரமான திட்டங்கள்,

இலவசங்கள் இதெல்லாம் இருக்கும் பொருளாதாரத்தை பற்றி பேசுகிறார்கள்.

என்று ஒரு தெளிவான ஒரு திட்டப் படிகளை எல்லாத்தையும் போட்டி போடவில்லை.

எனக்கு நீங்க ஓட்டு விழுந்து நீங்க போடுற ஓட்டு நம்ம ஜெயிக்கிறதுக்காக இல்ல, ஒரு மாற்றத்திற்காக நினைக்கிறேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்து இருக்கிறார் .

முழு தொகுப்பு பார்க்க கீழே காணொளி பாருங்க

Posted in சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சி fake ஷோ – கஸ்தூரி

பிக்பாஸ் நிகழ்ச்சி fake ஷோ – கஸ்தூரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சி பேக் ஷோ என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி fake ஷோ – கஸ்தூரி காட்டம்
கஸ்தூரி
90-களின் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்துவைத்திருந்தார். இவர் சமீபத்தில்

பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் தொடங்கியுள்ளது. இதில் கடந்த 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீண்டும் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கஸ்தூரி இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்நிகழ்ச்சியில் அவர் இடம் பெறவில்லை. ஏன் பிக்பாஸ்

அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கஸ்தூரியிடம் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து காட்டமாக பதிலளித்துள்ளார்.

கஸ்தூரி
கஸ்தூரி

அந்த பதிவில் அவர் கூறியிருப்பது, “எனக்கு குடும்பம் இருக்கு, வேலைகள் நிறைய இருக்கிறது. இந்த நச்சுதன்மை வாய்ந்த நிகழ்ச்சிக்கு வர நேரம் இல்லை. குறிப்பாக

இந்த போலி நிகழ்ச்சிக்கு பின்னால் பணத்துக்காக ஓட முடியாது. உங்கள் எதிர்பார்ப்பை வேறு எங்கேயாவது கொண்டு செல்லுங்கள்” என கஸ்தூரி பதில் அளித்திருந்தார்.

    Posted in சினிமா

    அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி

    அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜூன் 19-ந் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தனி விமானத்தில் அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி கேள்வி
    கஸ்தூரி, ரஜினிகாந்த்


    ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: “மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கொரோனா காரணமாக

    இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை.

    பிறகு எப்படி, ஏன் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்தார்? அவர் திடீரென அரசியலில் இருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.

    தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்க காரணம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அமெரிக்காவுக்குத் திரும்ப

    அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    எனவே ரஜினி பயண பிரச்சினை நிச்சயமாக ஒரு மர்மமாகும். ரஜினி இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். இது இன்னும் கவலை அளிக்கிறது

    . இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல் நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவர்கள் வழக்கமான பரிசோதனை என்று சொன்னார்கள்?

    மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்கு பெயர் பெற்றது. நான் இதைப் பற்றி அதிகம் நினைக்க நினைக்க இது இன்னும் மோசமானதாக தோன்றுகிறது. மேலும் ரசிகர்களே, தயவுசெய்து ‘ரஜினிகாந்திற்கு விதிகள் பொருந்தாது’ போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம்.

    அப்படி ஏதேனும் இருந்தால், அத்தகைய மிகப்பெரிய ஐகான்கள் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்”. இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

      Posted in சினிமா

      கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி

      கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி

      பிரபல நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவருமான கஸ்தூரி கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

      கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி
      கஸ்தூரி
      செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள

      படம் இ.பி.கோ 302. இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

      காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரிக்கு துணைபுரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின்

      பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சலங்கைதுரை.

      இ.பி.கோ 302 படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகை கஸ்தூரி பேசியதாவது..

      கஸ்தூரி

      இந்த படத்தில் இப்படியொரு கேரக்டரை கொடுத்த டைரக்டர் சலங்கைத்துரை அவர்களுக்கு முதல் நன்றி. தமிழில் நான்

      போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. இந்தப்படம் வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது. நிச்சயம் இது ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும்.

      பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து காத்திரமான குரலை எழுப்பும் படமாக இது இருக்கும் என்று உறுதியாகச்

      சொல்லலாம். இப்படத்தை மக்கள் அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். ஏன் என்றால் இது இன்றைய சமூகத்திற்கு

      தேவையான அறம் சார்ந்த படம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. குறிப்பாக காதலர்கள் அனைவரும் இப்படத்தைப்

      பார்க்கவேண்டும். எது காதல் என்பதை இப்படம் பேசியுள்ளது என்றார். வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது.