Tag: கவிதை காதல்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்
உன்னை தா எனக்கு
உன்னை தா எனக்கு
உனக்குள்ளும் ஒரு காதல் பூத்திருக்குதே – இதை
உணராமல் நீ இன்று மறந்திருக்குதே
வார்த்தைகளை கோர்த்து இன்று பேசிவிடு
வளையல்கள் உடையுமுன்னே நீட்டிவிடு
நாளை என்று காத்திருந்தால் இறந்திடுவாய்
நல்ல காதலை நீயும் இழந்திடுவாய்
இறக்கும் முன்னே வாழ்ந்துவிட வந்துவிடு
இதயமதை ஓடி வந்து தந்துவிடு
நீ சிரிச்சா நான் மகிழ்வேன் ஏற்றுவிடு -அந்த
நீர் உறங்கும் கன்னக்குழி தந்துவிடு
மூச்சிழக்க பேசும் உன் உதடு
முத்தமிட நீ எனக்கு தந்துவிடு
உலகாளும் அத்தனையும் உனக்கிருக்கு – நீ
உறங்குமிடம் ஏனோ இங்கிருக்கு ..?
உன் திறனை ஏன் மறைத்தாய் சொல்லெனக்கு
உலகாள வைத்திடுவேன் உனை தாயெனக்கு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 27-07-2022






