Tag: கவனயீர்ப்பு
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு ,நோன்பு பெருநாள் தினமாகிய திங்கட்கிழமை (31) அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையை தொடர்ந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று இடம் பெற்றது.
இஸ்ரேலுக்கு எதிரான இக் கண்டனப் பேரணியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல கோசங்களையும் எழுப்பியிருந்தது டன் இதனை
திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது பலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் கலந்து கொண்டனர் .
இதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து கொண்ட பலஸ்தீனத்துக்கு ஆதரவான மற்றுமொரு நிகழ்வும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி vc மைதானத்தில் இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த எம்.எம்.மஹ்தி பாலஸ்தீன மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டு புனிதமான இந்த நாளிலே
இருக்கிறார்கள்.இஸ்ரேல் இன அழிப்பு விடயத்தை செய்து கொண்டிருக்கின்றது. இதனை இந்த நாடு கண்டிக்க வேண்டும் என்பதுடன் ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் .
அண்மையில் முஹம்மது ருஸ்தி எனும் இளைஞன் ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவே
ஜனாதிபதி இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக இளைஞனை விடுதலை செய்ய வேண்டும்.
பாலஸ்தீன மக்களுக்கு அநுர அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும். பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு , தனி இராஜ்ஜியம் என்ற அடிப்படையில்
வழங்கப்பட வேண்டும் .இன அழிப்பை செய்யும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கும் நிலை காணப்படுகின்றது.
ஆகவே கைது செய்யப்பட்ட முஹம்மது ருஸ்தி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம்.தற்போதைய
அரசாங்கமும் பாலஸ்தீன மக்களுக்கு குரல் எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார்
ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார்
ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார் ,ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக முல்லைத்தீவில் நேற்றைய தினம் (06) மாலை 06.30 மணிக்கு இருளிலிருந்து நாட்டை ஒளியேற்றிய தலைவர் எனும்
தொனிப் பொருளில் தீப்பந்தம் தாங்கி ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நடைபெற்றவிருந்த வேளையில் தேர்தல் அதிகாரி மற்றும் பொலிஸாரால் கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக முல்லைத்தீவில் தீப்பந்தங்கள் தாங்கியவாறு முல்லைத்தீவு சுற்றுவட்டத்திற்கு அருகில் நடைபெறவிருந்த கவனயீர்ப்புக்கு ஏற்பாடுகள் செய்வதற்காக ஜனாதிபதி வேட்பாளர்
ரணில் விக்கிரமசிங்கவின் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் பரப்புரை அலுவலகத்திற்கு முன்னாள் சுமார் 25 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்றுகூடியிருந்த வேளையில் முல்லைத்தீவு தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் வருகைதந்து கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது தேர்தல் விதிமுறைக்கு மீறிய செயலெனவும் அவ்வாறு கவனயீர்ப்பு மேற்கொள்ளப்படுமாயின் கைது செய்யப்படுவீர்கள் எனவும் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து கவனயீர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
தடுத்து நிறுத்தப்பட்ட கவனயீர்ப்பை தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் பரப்புரை அலுவலகத்துக்கு முன்னாள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று(30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9 வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரபட்சம் காட்டும் வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்!
பாரபட்சம் காட்டும் வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்!
பைஷல் இஸ்மாயில் –
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு குறைப்பிற்கு எதிராகவும் அதனை வழங்கக்கோரிய ஒரு மணிநேர கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப்
போராட்டத்தை நாளை (27) முன்னெடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலையின் சுகாதார தொழில் வள்லுனர்கள் ஒன்றியத்தின் தலைவரும், தாதிய உத்தியோகத்தருமான ஏ.ஆர்.விஷாம் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து நாளை காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரை வைத்தியசாலைக்கு முன்பாக
கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ ஆய்வுனர்கள், ஒளிப்பதிவு
இயக்குனர்கள், மருத்துவ மாதுக்கள், E.C.G தொழில் நுட்பவியலாளர்கள், கண்பார்வை தொழில் நுட்பவியலாளர்கள் ஆகியோர் வைத்தியசாலைக்கு வருகைதந்து தங்களின்
கடமைகளில் எவ்வித குறைகளுமின்றி பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்ற இந்நிலைமையில் அவர்களின் முழுமையான மேலதிக நேரக் கொடுப்பனவை வைத்தியசாலை நிருவாகம் வழங்க மறுத்துள்ளது.
கடந்த 2022.05.13 ஆம் திகதி அரசினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கமைவாக, வைத்தியசாலையின் நிருவாகத்திடம் கலந்துரையாடியபோது, அவரவர்களின்
அடிப்படைச் சம்பளத்திற்கேற்ப எல்லோருக்கும் சமமாக முழுமையான மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று நிருவாகத்தினர் தெரிவித்திருந்தபோதும்,
கடந்த ஏப்ரல் மாதக் கொடுப்பனவை முழுமையாக வைத்தியர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு ஏனை சுகாதார ஊழியர்களுக்கு பூரணமாக வழங்க மறுத்துவிட்டனர்.
அரசினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு முரனாகவும்,
வைத்தியர்களைத் தவிர ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டும் செயற்பாடுகளை
வைத்தியசாலை நிருவாகத்தினர் முன்னெடுத்து வருகின்ற விடயங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எங்களுக்கான சரியான தீர்வினை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் வழங்கவேண்டும் இல்லை எனில்
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முன்வைக்கப்பட்டு அதற்கான போராட்டங்களை முன்னேடுக்கவுள்ளோம்
என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




















