Posted in மருத்துவம்

இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இரவில் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள்தான் குடலுக்கு இதமளிக்கும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.

ஆயுர்வேதத்தின்படி இரவில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அவை செரிமானமாவதற்கு எளிதாக இருக்கும். இரவில் காரமான,

எண்ணெய் கலந்த கடினமான உணவுகளைஇரவில் உட்கொள்ளும்போது செரிமானமா வதில் சிக்கல்கள் உண்டாகும். அத்துடன் தூக்கமின்மை, மன அமைதியின்மை, நீரிழப்பு, வாயு தொல்லை,

வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடும். குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் குடலுக்கு இதமளிக்கும். காலையில் அதிக ஆற்றலை உணரவைத்து

உற்சாகமாக செயல்பட தூண்டும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகள் இரவில் தவிர்க்க வேண்டும்.

தயிர்: சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாவதற்கு தயிர் உதவும். ஆனால் இரவில் அதனை உட்கொள்ளக்கூடாது. தயிருக்கு பதிலாக இரவில் மோர் அருந்தலாம். ஏனெனில் தயிர் உடலில் கபம்

சார்ந்த பிரச்சினையை அதிகரிக்கும். உணவுகள் உடலில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். நாசி துவாரங்களில் சளி உருவாகுவதற்கும் வழிவகுத்துவிடும்.

சாப்பாடு: இரவில் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். மேலும் குறைவான அளவே சாப்பிட வேண்டும்.

இந்த இரண்டு விஷயங்களையும் இரவில் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கும். பொதுவாக இரவில் செரிமான அமைப்பின்

செயல்பாடு வெகுவாக குறைந்துவிடும். அந்த சமயத்தில் அதிகமாக உணவுகள் சாப்பிடுவது, ஜீரணமாவதற்கு கடினமாகிவிடும். காலையில் அஜீரணம், வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

புரதம்: இரவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். பயறு வகைகள், பச்சை காய்கறிகள், கறிவேப்பிலை, பழங்கள் போன்றவற்றை இரவில் சாப்பிடலாம்.

இரவில் இத்தகைய உணவுகள் செரிமான அமைப்பை மிகவும் இலகுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால்: இரவில் பால் பருகும் பழக்கம் இருந்தால், குறைந்த கொழுப்புள்ள பாலைத்தான் உட்கொள்ள வேண்டும். அதேவேளையில் குளிர்ந்த பாலை உட்கொள்ளக்கூடாது. சூடான பாலை பருகுவதுதான்

சிறந்தது. ஏனெனில் சூடான பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால்தான் எளிதில் ஜீரணமாகும். இரவில் வெறுமனே பால் பருகுவதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். பாலுடன் சிறிதளவு இஞ்சி அல்லது ஏலக்காய் சேர்த்து பருகலாம்.

சாலா பொருட்கள்: உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் அனைத்தும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆரோக்கியமான மசாலாப் பொருள்களை தேர்வுசெய்தால், அது

உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவும். பசி உணர்வையும் சீராக பராமரிக்கும். அவற்றை இரவு உணவிலும் பயன்படுத்தலாம். ஆனால் காரமான மசாலா பொருட்களை இரவில் சாப்பிடக்கூடாது.

இரவு உணவில் லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், வெந்தயம், ஏலக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

    Posted in மருத்துவம்

    சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

    சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

    மாம்பழங்கள் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன

    . ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் உபாதைகளை அனுபவிக்க நேரிடும்.

    உலக அளவில் இந்தியா தான் மிகச்சிறந்த மாம்பழ வகைகளை உற்பத்தி செய்து வருகிறது.

    அதிக சுவை, தரம் கொண்ட மாம்பழங்கள் இந்தியாவில்தான் விளைவிக்கப்படுகின்றன.

    மாம்பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் உபாதைகளை அனுபவிக்க நேரிடும்.

    நீர்: மாம்பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். அது உடலுக்குள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். வயிற்றுவலி, அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற

    பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து வேண்டுமானால் தண்ணீர் பருகலாம்.

    தயிர்: சிலர் மாம்பழ துண்டுகளுடன் தயிர் கலந்து சாப்பிடுவார்கள். அது ருசியாகவும் இருக்கும்.

    இருப்பினும் மாம்பழம் வெப்பமானது, தயிர் குளிர்ச்சியானது. அதனால் உடலில் வெப்பத்தையும், குளிரையும் ஒருசேர உருவாக்கும்போது சரும பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    பாகற்காய்: மாம்பழம் சாப்பிட்ட உடனேயே கசப்பு தன்மை கொண்ட எந்த பொருளையும் சாப்பிடக்கூடாது.

    சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

    குறிப்பாக பாகற்காய் போன்ற உணவுகளை சாப்பிடும்போது குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

    காரமான உணவு: மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். அவை வயிற்றுப்பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தையும் உண்டாக்கும். முகப்பரு தோன்றுவதற்கும் வழிவகுக்கும்.

    குளிர் பானம்: குளிர் பானங்களுடன் மாம்பழம் சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

    மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் இருக்கிறது. குளிர் பானங்களிலும் சர்க்கரை அதிகம்

    கலந்திருக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அப்படி மாம்பழம் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும்.

    அதனால் மக்களே தினம் தோறும் மறக்காது சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக மேலே குறிப்பிட பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்