Tag: இலங்கை
சுவிசில் இருந்து இலங்கை வந்தவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
சுவிசில் இருந்து இலங்கை வந்தவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத
சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். நேற்று இந்த சம்பவம் நடந்தது.
சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில் வந்து, கோண்டாவிலிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
அந்த வீட்டுக்காரர்களும், சுவிஸ் குடும்பமும் நேற்று காலையில் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றனர். இதன்போது, பெறுமதியான தங்க நகைகள், சேலைகளை
அலுமாரிக்குள் மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். மாலையில் வீடு திரும்பினர்.
அலுமாரியில் பொருட்கள் கிளறியிருந்ததை அவதானித்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தேடிய போது, அவை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தடம் புரண்ட ரயில் – பல சேவைகள் பாதிப்பு
தடம் புரண்ட ரயில் – பல சேவைகள் பாதிப்பு
இலங்கை கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் ஒன்று
தடம் புரண்டதில் மலையக ரயில் சேவைகள் பாதிக்க பட்டுள்ளன
விரைவில் மீட்பு பணிகள் சீர் படுத்த பட்டு சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என
தெரிவிக்க படுகிறது
இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
இலங்கை மோதர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர்
இணைந்து நடத்திய தேடுதலின் பொழுது பாதாள உலக குழுவை சேர்ந்த நபர் ஒருவர்
சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
இவர் பல கடத்தல் ,கொலை மற்றும் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடையவர் என
தெரிவிக்க பட்டுள்ளது
விபத்தில் சிக்கி ஆறுபேர் மரணம்
விபத்தில் சிக்கி ஆறுபேர் மரணம்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்னல – கிரியுல்ல வீதியின் தலமெஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) கிரியுல்லயிலிருந்து பன்னல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த பஸ்ஸைக் கடக்கும்போது எதிர்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சந்தலங்காவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர் போபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிரியன்கல்லிய – அதியாகம வீதியில் அக்கரவெல்லிய கறுப்புப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 52 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) பிற்பகல் துவிச்சக்கர வண்டியுடன் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் முந்தலம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பத்துலுஓயா பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்று காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுங்கேணி நகரிலிருந்து புளியங்குளம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன் நாரம்மலயிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது மோதியதில் மஹவிலச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பெரகல – ஹாலிஎல வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கல்நேவ – தம்புத்தேகம வீதியில் புல்னேவ சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம்
இலங்கையில் இருந்து வந்த பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம்
பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதில் எவ்விதமான மாற்றம் ஏற்படுத்த பட்டுள்ளது என்பது தொடபில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை
கொரியா பறந்த மைத்திரி
கொரியா பறந்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
தென் கொரியாவில் நடைபெறும் மாநாட்டு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர் சென்றார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் மேலும் இருவர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்..
மகன் மரணம் – தாய், தந்தை கைது
மகன் மரணம் – தாய், தந்தை கைது
10 வயதான சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், அச்சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சிறுவனின் சடலம், நீர்கொழும்பு, படல்கம ஆண்டிபொலவில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக, கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அவ்வீட்டின் அறையொன்றுக்குள் இருந்து சிறுவனின் சடலம் நேற்று முன்தினம் (09) மாலை மீட்கப்பட்டுள்ளது.
தொண்டையில் சளி சிக்கியமையால், அச்சிறுவன் கடந்த 7ஆம் திகதியன்று நோய்வாய்ப்பட்டுள்ளார்.
அந்த நோயை சுகப்படுத்துவதற்காக அவருடைய பெற்றோர், தாங்கள் நம்பும் சமயத்தின் அடிப்படையில் தியானம் செய்துள்ளனர்.
அந்த தியானத்தின் போதே சிறுவன் மரணமடைந்துள்ளார். எனினும், அவரை உயிர்பிப்பதற்காக, தொடர்ச்சியாக தியானம் செய்துள்ளனர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அவரை சுகப்படுத்துவதற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையிலேயே தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மூவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த படல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
விளையாட்டு துப்பாக்கி தூக்கியவர் பதவியை இராஜினாமா செய்தார் .
விளையாட்டு துப்பாக்கி தூக்கியவர் பதவியை இராஜினாமா செய்தார் .
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த குழுவொன்று, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச
விமான நிலையத்தை 2014 ஆம் ஆண்டு பார்வையிட சென்றிருந்த வேளையில்,
கைத்துப்பாக்கியை காண்பித்து அக்குழுவினர் அச்சுறுத்தியிருந்தார்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஏந்திவந்தது கைத்துப்பாக்கி அல்ல, விளையாட்டுத் துப்பாகியென அவர் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிக்கும் சிங்கள இராணுவம்
யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிக்கும் சிங்கள இராணுவம்
சுகதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கமைவாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது கஜபா
படையணியின் படையினர் 30 ஜனவரி 2022 முதல் 2022 பெப்ரவரி 03 வரையான காலப்பகுதியில் யாழ். நகரப்குதியை உள்ளடக்கிய பகுதிகளில் பொலிஸார் மற்றும்
சுகாதார வைத்திய பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு தொடர்பில் வழிப்புணர்வூட்டுவதற்கான பிரசாரங்களை மேற்கொண்டனர்.
இத்திட்டம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய
512 வது பிரிகேட் தளபதி கேணல் தனூஜ கொடேவத்த அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
குற்றவியல் சட்டத்தில் திருத்தம்
குற்றவியல் சட்டத்தில் திருத்தம்
குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a
pre-trial method which would limit delays in law.) அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) நீதித் துறையுடன் தொடர்புபட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் சட்ட சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் சட்டம் தொடர்பில் மக்களுக்குள்ள நம்பிக்கையை வலுப்படும் வகையிலும் நீதித்துறையில் சில திருத்தங்களை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.
வழக்குகள் பல வருட கால தாமதமாவதால் அதனைத் தடுப்பதற்கு மாற்று வழிகள் அவசியமென்றும் தெரிவித்த அவர் மக்கள் சட்டத்தில் மூலம் நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கின்றனர் இதன் காரணமாக வழக்குகளில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
சிறுவர் பாலியல் முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றை சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த வழக்கு 20 வருட காலம் நடைபெற்றது. அதன் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர் இளம் வயதை எட்டியபோதே தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறான தாமதங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
சில வழக்குகள் பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றன. சில வழக்குகள் 50 வருடங்களுக்கு மேல் தொடர்கின்றன இதற்கு மாற்று வழி அவசியம்.இந்தத் திருத்தங்களை முன்வைப்பதற்கு முன்பாக நான் சட்டத்தரணிகளுடன்
கலந்துரையாடினேன்.சபையிலும் அனைவரும் இதற்கான ஒத்துழைப்பை வழங்குவார்களென்ற நம்பிக்கை உண்டு. சில சட்டத்தரணிகள் வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு விருப்பமில்லாமல் உள்ளார்கள் என்ற தவறான கருத்துக்களும் சமூகத்தில்
நிலவுகின்றன. அவ்வாறு விரைவுபடுத்தினால் அவர்களுக்கான தொழில் இருக்காதென்றும் தெரிவிக்கப்படுகிறது. அது தவறானது என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்
கிரணின் உச்ச கட்ட கவர்ச்சி… முகம் சுளிக்கும் ரசிகர்கள்
கிரணின் உச்ச கட்ட கவர்ச்சி… முகம் சுளிக்கும் ரசிகர்கள்
ஜெமினி, வின்னர், வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
கிரணின் உச்ச கட்ட கவர்ச்சி… முகம் சுளிக்கும் ரசிகர்கள்
கிரண்
ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த ‘வின்னர்’ படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கிரண்
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் முகம் சுளிக்கும் அளவிற்கு இருப்பதால் ரசிகர்கள் பலர் ஆபாச கமெண்ட்டுகள் பதிவு செய்து வருகிறார்கள்.
ஒருவர் குத்திக் கொலை
ஒருவர் குத்திக் கொலை
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷ்மி வீதிப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) காலை லக்ஷ்மிபர பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அங்கிருந்தவர் மற்றும் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றியதை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த மூவரும் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கம்பஹா லக்ஷ்மி வீதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் பி.சி.ஆர் பரிசோதனைகள் திடீரென இடைநிறுத்தம்
யாழில் பி.சி.ஆர் பரிசோதனைகள் திடீரென இடைநிறுத்தம்
வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் இதை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர்
பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை அவை இடைநிறுத்தப்படுகிறது என்றார்.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
12 வயது சிறுமி மாயம்- தேடும் பொலிஸ்
12 வயது சிறுமி மாயம்- தேடும் பொலிஸ்
சகல பிள்ளைகளும் வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது, 12 வயதான சிறுமியொருவர் காணாமற் போய்விட்டார் என, கம்பளை மற்றும் கலஹா பொலிஸ்
நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கம்பளை நில்ஓய காரியாலய சந்திப் பிரதேசத்தில் வசிப்பிடமாகக் கொண்ட யோகராஜா கலைவாணி என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார். இவர், பாடசாலை மாணவியாவார்.
சின்ன அம்மாவின் வீட்டுக்குச் சென்றிருந்த போதே, இவ்வாறு காணாமற் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் தந்தையான கதிர்வேல் யோகராஜா, கண்டி பொதுச் சந்தையில் கடமையாற்றுகின்றார், தாய், தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்குச் சென்றிருந்துள்ளார்.
அதனால், அவர்களின் பிள்ளைகள் மூவரும், சின்ன அம்மாவின் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
சின்ன அம்மாவின் பிள்ளைகள் இருவரும், இந்த சிறுவர்கள் மூவரும், இணைந்து விளையாடி கொண்டிருந்துள்ளனர். அவ்வாறு விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளிடம், பாடம் கற்கவேண்டுமென சின்ன அம்மா எச்சரித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், கடந்த 7 ஆம் திகதி இரவு, தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த போதே, பிள்ளை காணாமல் போனமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, சிறுமியை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கிராமத்தவர்கள் அனைவரும் இணைந்து அருகிலிருக்கும் வீடுகள் மற்றும் பிரதேசங்கள், பற்றைக்காடுகளில் தேடியுள்ளனர். சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்காமையால், சின்ன அம்மாவான பீ. நாகேஸ்வரி, சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைந்து செயற்பட்ட பொலிஸார், பொலிஸ் நாயின் உதவியுடன் சிறுமியை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். நேற்று (08) வரையிலும் அச்சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை.
பொலிஸ் நாய், கிராமத்திலிருந்து பிரதான வீதி வரையிலும் வந்து, நின்றுக்கொண்டது. இதனால், பொலிஸார் தமது விசாரணைகளை திசை திருப்பிவிட்டுள்ளனர்.
கடற்பரப்புகளில் பலத்த காற்று-மக்களுக்கு எச்சரிக்கை
கடற்பரப்புகளில் பலத்த காற்று-மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலைமற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2022 பெப்ரவரி 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாககொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு அவ்வப்போது 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்
இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்
இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர்.
தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.
முன்பதாக
இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று(07) நடைபெற்றது.
மயிலிட்டி மீ்ன்பிடித் துறை முகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சின் முன்பாக தென்னிலங்கை கடற்றொழிலாளர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களை நேரடியாக சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி
துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி
புத்தளம் – பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா பகுதியில் நேற்று (8) இரவு கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் ஆண்டிகம பெரியமடு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரால் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கில் புதிய அமைச்சர்கள் நியமனம்
கிழக்கில் புதிய அமைச்சர்கள் நியமனம்
பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு அமைவாக (07) மாகாண
அமைச்சுக்களின் செயலாளர்கள் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக திருமதி ஜே.ஜே.முரளிதரன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், அமைச்சின் கீழுள்ள
திணைக்களங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய
கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக், சிறுவர் நன்நடத்தை திணைக்கள மாகாணப் ஆணையாளர்
(திருமதி) ஆர்.றிஸ்வானி, சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் என்.மதிவண்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சின் செயலாளராக (திருமதி) கலாமதி பத்மராஜா தனது அலுவலகத்தில் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள்,தி ணைக்களங்களின் பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண (ஆளணி மற்றும் பயிற்சி) பிரதி பிரதம செயலாளராக (திருமதி) ஆர்.யூ.ஜலீல் தமது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான ஏ.மன்சூர் தமது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்கா சர்வ மத சமய அனுஷ்டானங்களுடன் தமது அமைச்சில் கடமைகளை சுபநேரத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம்.அன்ஸார் மற்றும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக எம்.கோபாலரத்தினம் ஆகியோர்களும் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் அமைச்சின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், திணைக்களங்களின் மாகாண ஆணையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய
சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன், தனிப்பட்ட விமானமொன்றில் கடந்தவருடம் இந்தியா திருப்பதிக்குச் சென்றிருந்தார்.
இந்த தனிப்பட்ட விஜயம் தொடர்பில், மேற்படி ஆணைக்குழுவுக்கு 2021.12.31 ஆம்
திகதியன்று செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது
5000 ரூபா விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்
5000 ரூபா விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்
நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம்
பெறுவோருக்குமான ஐந்து ஆயிரம் ரூபா (5000) விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்தில் சேர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
ஜனவரி மாதத்திற்கான விசேட கொடுப்பனவு நிலுவை பெப்ரவரி மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் ஓய்வூதிய
திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தில் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரினதும்
ஓய்வூதிய பற்றுச்சீட்டில் தற்போது இதனை பார்வையிட முடியும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் அறிவித்துள்ளார்.
புலம்பெயர் ஓய்வூதியம் பெறுவோர் தவிர அனைத்து அரச ஓய்வூதியம் பெறுவோரும் இக் கொடுப்பனவை பெற உரித்துடையவர்களாவர்.
இந்த கொடுப்பனவின் மூலம் சுமார் ஆறு இலட்சம் ஓய்வூதியம் பெறுவோர் நன்மை அடைவர் என்றும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் மேலும் தெரிவித்தார்.












