Posted in மருத்துவம்

இருமல் ஜலதோஷத்தை குணமாக்க இதை சாப்பிடுங்க

இருமல் ஜலதோஷத்தை குணமாக்க இதை சாப்பிடுங்க

இந்த இஞ்சி கசாயம் இரவில் அருந்தி படுத்தால், நிம்மதியாக தூங்கலாம். மூக்கடைப்பு, இருமல், தொண்டைப்புண், ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.

இருமல், ஜலதோஷத்தை குணமாக்கும் இஞ்சி கஷாயம்
இஞ்சி கஷாயம்
பெரும்பாலானவர்கள் இப்போது அதிக நேரம் ஒரே இடத்தில்

அமர்ந்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதனால் உடல் வலி தோன்றும். அந்த உடல் வலி மட்டுமின்றி இருமல், தும்மல், மூச்சு அடைப்பு போன்றவைகளை குணப்படுத்தும்

ஆற்றல் இஞ்சிக்கு இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனை மேம்படுத்தும் சக்தியும் இஞ்சிக்கு உண்டு.

இஞ்சியை கஷாயம் வைத்து பருகுவது நல்லது. ஒரு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக தோலை சீவிவிட்டு அம்மியில் வைத்து நசுக்குங்கள். அதை அப்படியே தண்ணீரில்

இருமல் ஜலதோஷத்தை குணமாக்க இதை சாப்பிடுங்க

போட்டு கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்த பின்பு இதமான சூட்டில் சிறிதளவு பனைவெல்லம் அதில் கலந்து பருகுங்கள்.

இங்கே எனது குழந்தைகளுக்கு சளி பிடித்துள்ளது . இந்த வானிலை மாற்றம் எளிதாக சளி பிடிக்க வைத்து விடுகிறது . இந்த இஞ்சி

கசாயம் இரவில் அருந்தி படுத்தால் ,நிம்மதியாக தூங்கலாம் . மூக்கடைப்பு ,இருமல்,தொண்டைப்புண் ,ஜலதோஷம் போன்ற பல

பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது .முயற்சி செய்து பாருங்கள் …நிச்சயம் பலன் அளிக்கும் .

தேவையான பொருட்கள் :

இஞ்சி – 1 துண்டு
மிளகு -1 மற்றும் 1/2 ஸ்பூன்
மல்லி -1 மற்றும் 1/2 ஸ்பூன்
வெல்லம் – 2 ஸ்பூன்
தண்ணீர் – 1 மற்றும் 1/2 கப்

செய்முறை :

இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

இஞ்சி, மிளகு, மல்லி இவற்றை கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்

இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, வடிகட்டி பரிமாறவும்.

இதனுடன் பால் கலந்தும் குடிக்கலாம்

    Posted in மருத்துவம்

    இருமலை போக்க இதை சாப்பிடுங்க

    இருமலை போக்க இதை சாப்பிடுங்க

    இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த அதிமதுரம் தேங்காய் பாலை குடித்தால் நிவாரணம் பெறலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    இருமலை போக்கும் அதிமதுரம் தேங்காய் பால்
    அதிமதுரம் தேங்காய் பால்
    தேவையான பொருட்கள்:

    அதிமதுரம் – 5 துண்டுகள்

    தேங்காய்ப் பால் – 1 டம்ளர்
    சுக்கு பொடி – 1 டீஸ்பூன்


    தூளாக்கிய வெல்லம் – தேவைக்கு
    ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்

    அதிமதுரம் தேங்காய் பால்

    செய்முறை:

    அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.

    மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

    இதனை ஆறவைத்து பருகலாம்.

    இருமலை போக்க இதை சாப்பிடுங்க
    இருமலை போக்க இதை சாப்பிடுங்க