Tag: அமைச்சர்கள்
லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலியஅமைச்சர்கள்
லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள் ,லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும், முழு அளவிலான போருக்குத் திரும்பவும் இஸ்ரேலிய அமைச்சர்கள் அழைப்பு
ஆளில்லா விமானத் தாக்குதல்
லெபனானிலிருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இன்னும் தீவிரமான
பதிலடி கொடுக்க வேண்டும் என்று இரண்டு மூத்த இஸ்ரேலிய அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
லெபனானுக்கான மின்சார விநியோகத்தை இஸ்ரேல் துண்டிக்க வேண்டும், ஜஹ்ரானி நதியைக் கைப்பற்ற வேண்டும் மற்றும் முழு அளவிலான இராணுவ
நடவடிக்கைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் கூறினார்.
ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானத் திறன்களுக்குக் கடுமையான பதிலடி
ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானத் திறன்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், தாக்குதல்களுக்கு இஸ்ரேல் அதிக விலையை
விதிக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் அழைப்பு விடுத்தார்.
வடக்கு இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து ஹிஸ்புல்லா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து,
பதிலடித் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலிய இராணுவத் தலைவர்கள் விவாதித்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
ஃபைபர்-ஆப்டிக் வழிகாட்டுதல் மற்றும் வெப்பப் படமாக்கல் அமைப்புகள் பொருத்தப்பட்ட மேம்பட்ட ஆளில்லா விமானங்களை ஹிஸ்புல்லா பயன்படுத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து வரும் தாக்குதல்களுக்குக் கடுமையான பதிலடி கொடுப்பதாக நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.
மேலும், வளர்ந்து வரும் ஆளில்லா விமான அச்சுறுத்தலை எதிர்கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில்
எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில்
எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில் ,எதிர்வரும் திங்கட்கிழமை ஆளும் அனுரா அரசில் 25 அமைச்சர்கள் நியமிக்க படவுள்ளதாக அந்த அரசை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .
22 மில்லியன் மக்களுக்கு 25 மைச்சர்கள் வழிகாட்டிகளாக இருந்து நாதரை கட்டி காப்பாற்ற போகின்றனர் .
இந்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுக்கு வழங்க பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த தெரிவு இடம்பெறும் எனவும் ,மக்களுக்கு உரிய எதிர் பரப்புக்குள் பூர்த்தி செய்யப்படும் என எதிர் பார்க்க படுகிறது .
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா ,இலங்கையில்ஆளும் புதிய ஜனாதிபதி அனுரா திசாநாயக்க ஆட்சி பீடம் ஏறியதன் , பின்னர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராயங்க அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது .
எதிர் வரும் சில தினங்களிற்குள் உடனடியாக ஆடம்பர பங்களாக்கள் ,வீடுகள் என்பனவற்றை அமைச்சர்கள் ஒப்படைத்து விட்டு ஓடி தப்புமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் காலத்தில் ஆடம்பர சொகுசு வாழ்கை வாழ்ந்து வந்தவர்களுக்கு தற்போதுஆ , ஆளும் அனுரா குமார திசாநாயக்க ஆட்சி சட்டப்படி அதிரடி வைத்தியத்தை கொடுத்து வருகிறது .
சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் ,இலங்கை அரசியல்வாதிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர் .
கால மற்றம் இது தன போல் உள்ளது .
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்
அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்
அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள் ,நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












