Tag: Three Sikh men
லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
லண்டன்- இல்போர்ட் செவின் கிங்ஸ் ரயில்வே நிலையம் அருகே மூன்று இந்தியா நாட்டை சேர்ந்த சீக்கிய இன வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .
இவர்கள் மூவரும் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
மேற்படி படுகொலை தொடர்பான காணொளிகள் வைரலாக பரவி வருகிறது .
இந்த கொலை குழுமோதலாக தெரியவில்லை என தெரிவிக்கும் போலீசார் சமாச்சாரம் வேறாக இருக்கும் என கருதுகின்றனர் .
லண்டன்Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
நேரடி சாட்சிகள் கூறும் பொழுது எமது வீட்டின் முன்பாக வெளிநாட்டு மொழியில் கத்தும் பெரும் சத்தம் கேட்டது
அவ்வேளை வீதியை பார்த்த பொழுது திரைப்பட காட்சிகள் போல மூவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ந்து போனோம் .
அம்புலன்சுக்கு தெரிவிக்க பட்டது ,சம்பவ இடத்தில அவர்கள் வருவதற்குள் இவர்கள் மூவரும் இறந்த நிலையில் காணப் பட்டனர் .
ஸ்கொட்லாந்து யார்டு இந்த படுகொலையுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர் .
கைதானவர்களிடத்தில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது .
இந்த கொலைக்காண உடனடி காரணம் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பண பரிமாற்றம் என கருத படுகிறது ,
எனினும் உறுதியாக போலீசார் எதனையும் தெரிவிக்கவில்லை
லண்டன்Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
சம்பவம் வேறு என படுகிறது ,அப்படி என்றால் அது எது ..?
லண்டன் மேயர் சம்பவ இடத்திற்கு விரைந்து விடையங்களை ஆராய்ந்துள்ளார் ,
அதுபோலவே அப்பகுதி கவுன்சிலரும் இது விடயம் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்
மேற்படி கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது
விசாரணைகளில் அதிரடி திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,மேலும் இந்த கோர கொலையை புரிவதற்கு காரணமாகி விளங்கிய அனைவரும்
கைது செய்யப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்கள் குவிகிறது







