Tag: வெள்ளப் பெருக்கு
வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு நாடு முழுவதும் மோசமான வானிலையால் 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
பேரிடர் மேலாண்மை மையத்தின்
பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) தகவல்படி, நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் மொத்தம் 31,072
குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 79,983 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக 859 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், இரண்டு வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை
மேலும், மோசமான வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்ததையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவுவதற்கும்,
தேவையான ஆதரவை வழங்குவதற்கும் நிவாரணப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது

- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

மீண்டும் வெள்ளப் பெருக்கு அபாயம் கடும் மழை
மீண்டும் வெள்ளப் பெருக்கு அபாயம் கடும் மழை
மீண்டும் வெள்ளப் பெருக்கு அபாயம் கடும் மழை வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழை
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் வவுனியா
மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.
பலத்த காற்று மற்றும் மின்னல்
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க
போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மீண்டும் வெள்ளப் பெருக்குஅபாயம் கடும் மழையாழ் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
எனவே இம்மாதம் முடியும் வரை மக்கள் மிக பெரும் ஆகிருதலை எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுளளர்கள்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது

- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

லிபியாவில் நடந்த பயங்கரம் 20 000 பேர் பலி
லிபியாவில் நடந்த பயங்கரம் 20 000 பேர் பலி
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது. இதனால் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
புயல், கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கனமழையில் மற்றும் நீர் தேங்கியதில் 2 அணைகள் திடீரென வெடித்தன.
லிபியாவில் நடந்த பயங்கரம் 20 000 பேர் பலி
இதில் சிக்கி மக்களில் பலர் உயிரிழந்தனர். பல்வேறு பாலங்களும் சேதமடைந்து விட்டன. அணை உடைந்ததில் நீர் ஊருக்குள் புகுந்தன. இதில், பல கிராமங்களுக்குள் நீர் சூழ்ந்துள்ளது. டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், லிபியா வெள்ளத்தில் சிக்கி 18,000 முதல் 20,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை டெர்னா நகர மேயர் வெளியிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.












