கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நாளை (31) பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும் என எச்சரித்து, இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வெப்ப வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (30) மாலை 4.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்குப் பொருந்தும்.

மனித உடல் உணரும் வெப்பநிலையைக் குறிக்கும் வெப்பக் குறியீடு, பகல் நேரத்தில் சில பகுதிகளில் ‘எச்சரிக்கை’ நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்கவும், முடிந்தவரை நிழலை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவோர் நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வெடுக்குமாறும், உட்புறப் பணிகளில் ஈடுபடுவோர் முதியவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாகன ஓட்டிகள் குழந்தைகளை வாகனங்களுக்குள் கவனிக்காமல் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக, பொதுமக்கள் இலேசான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு மேலும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகல் நேரத்தில் வவுனியா

அதன்படி, நாளை (17) பகல் நேரத்தில் வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை,

பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில்,

மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின்படி, வெப்பக் குறியீட்டு முன்னறிவிப்பானது,

சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது; இது உங்கள் உடலில் உணரப்படும் நிலையாகும்.

சூரிய ஒளியில் நீண்ட நேரம்

சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும்,

தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அத்துறை குறிப்பிட்டுள்ளது.

எனவே, மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.