Posted in இலங்கை செய்திகள்

வீதி நிரல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை

வீதி நிரல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை

கொழும்பில் பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி நிரல் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்று முதல்

கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து வாகன கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான

இந்திக்க ஹப்புகொட இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கடந்த இரண்டு வார காலமாக வீதி நிரல் சட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் வீதிநிரல் சட்டத்தை மீறிய நபர்கள் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டு அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகுப்புக்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வீதிகளில் உள்ள மின்சார சமிஞ்சை தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர்

ஹப்புகொட தெரிவித்தார். கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் ஒரு வார கால ஒத்திகையாக வீதி நிரல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி ஆரம்பமானது.

இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் வீதி நிரல்

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்தனர்..

இதற்கு அமைவாக கொழும்பு பிரதான 4 வீதிகளை கேந்திரமாக கொண்டு வீதி நிரல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையிலும் வீதி நிரல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

வடக்கு வீதி இணைப்புத் திட்ட கடன் தொகைக்கான காலம் நீடிப்பு

வடக்கு வீதி இணைப்புத் திட்ட கடன் தொகைக்கான காலம் நீடிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு வீதி இணைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளுக்கான கடன் தொகை செல்லுபடியான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இக் கடன் தொகைக்கான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாக இருந்த நிலையில் 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மனம் பின்வருமாறு:

  1. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதியுடன் தொடர்புபட்ட திட்டத்திற்கான கடன் தொகைக்கான கால எல்லையை நீடித்தல்

  2. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கீழ் தேசிய
  3. பெருந்தெருக்கள் மற்றும் மாகாண வீதி புனரமைப்பு மற்றும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தெரிவு
  4. செய்யப்பட்ட பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு
  5. வருகின்றன. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. கடன் தொகையில் எஞ்சும் தொகைகளில் மதவாச்சி –
  6. ஹொரவப்பத்தான வீதியின் மேலதிக ஒப்பந்த பொதி 02, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த
  7. நிர்மாணப் பணிகளுக்கான கடன் நிதி செல்லுபடியான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாகும். இதற்கு முன்னர்
  8. இதனை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. இதற்கமைவாக
  9. சம்பந்தப்பட்ட கடன் தொகைக்கான காலத்தை 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக வீதி மற்றும்
  10. பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் கொலை செய்து மரத்தில் தொங்க விடப்பட்ட வாலிபர் – தொடரும் மர்ம கொலைகள்

      யாழில் கொலை செய்து மரத்தில் தொங்க விடப்பட்ட வாலிபர் – தொடரும் மர்ம கொலைகள்

      இலங்கை யாழ் கண்டி வீதியின் ஓரத்தில் நபர் ஒருவர் அடித்து கொலை

      செய்ய பட்ட பின்னர் ,மரத்தில் தூக்கில் தொங்கவிட பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

      யாழ்பாணத்தி மையப்படுத்தி தொடரும் பல படு கொலைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

      கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற 22 வது படு கொலை இதுவாகும் ,

      கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தொடரும் இந்த கொலைகளின்

      பின்புலத்தில் கஞ்சா கூலி கொலை குழு உள்ளது கண்டு பிடிக்க பட்டுளள்து

      எனினும் பொலிஸார் ஆதரவுடனும் ,அரசியல் செல்வாக்குடனும் இவர்கள் செயல் படுவதால் ,கைது தட்டி கழிக்க படுகின்றன

      தூக்கல் தொங்கி தற்கொலைஸ் ஐதர என சட்ட மருத்துவ அதிகாரி மரண

      சான்றிதழ் வழங்குவார் ,இவ்வாறே இந்த கொலைகள் மறைக்க பட்டு தற் கொலைகளாக மாற்றம் பெற்று வருகிறது