Tag: முழுவதுமாக அழிப்பு
பெட்டோ தீவிரவாத அமைப்பு முழுவதுமாக அழிப்பு
பெட்டோ தீவிரவாத அமைப்பு முழுவதுமாக அழிப்பு
துருக்கியை மையமாக கொண்டு நாட்டில் இயங்கி வந்த “Feto” என்ற பயங்கரவாத அமைப்பு துருக்கி – இலங்கை கூட்டு நடவடிக்கையினால் அழிக்கப்பட்டதாக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் டெமெட் செகர்ஜியோலு தெரிவித்தார்.
“ஃபெட்டோ” பயங்கரவாத அமைப்பு தொடர்பான புலனாய்வு தகவல்களை இரு நாடுகளும் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளும் என கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.
பெட்டோ தீவிரவாத அமைப்பு முழுவதுமாக அழிப்பு
2016 ஜூலை 15, அன்று, துருக்கியில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற “Feto” பயங்கரவாத அமைப்பின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த துருக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஏற்பட்ட வன்முறைச் சூழ்நிலை காரணமாக 251 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, கிளர்ச்சியை அடக்கிய துருக்கியின் ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக ஜூலை 15ஆம் திகதி கொண்டாடப்படுவதுடன், இந்நாட்டிலுள்ள துருக்கிய தூதரகத்தில் விழாவும் இடம்பெற்றது.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
by நிருபர் காவலன் - இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
by நிருபர் காவலன் - புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது
by நிருபர் காவலன் - பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது
by நிருபர் காவலன் - மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
by நிருபர் காவலன்







