Tag: முழுவதுமாக அழிப்பு
பெட்டோ தீவிரவாத அமைப்பு முழுவதுமாக அழிப்பு
பெட்டோ தீவிரவாத அமைப்பு முழுவதுமாக அழிப்பு
துருக்கியை மையமாக கொண்டு நாட்டில் இயங்கி வந்த “Feto” என்ற பயங்கரவாத அமைப்பு துருக்கி – இலங்கை கூட்டு நடவடிக்கையினால் அழிக்கப்பட்டதாக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் டெமெட் செகர்ஜியோலு தெரிவித்தார்.
“ஃபெட்டோ” பயங்கரவாத அமைப்பு தொடர்பான புலனாய்வு தகவல்களை இரு நாடுகளும் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளும் என கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.
பெட்டோ தீவிரவாத அமைப்பு முழுவதுமாக அழிப்பு
2016 ஜூலை 15, அன்று, துருக்கியில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற “Feto” பயங்கரவாத அமைப்பின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த துருக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஏற்பட்ட வன்முறைச் சூழ்நிலை காரணமாக 251 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, கிளர்ச்சியை அடக்கிய துருக்கியின் ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக ஜூலை 15ஆம் திகதி கொண்டாடப்படுவதுடன், இந்நாட்டிலுள்ள துருக்கிய தூதரகத்தில் விழாவும் இடம்பெற்றது.
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை
by நிருபர் காவலன் - அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன
by நிருபர் காவலன் - மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு
by நிருபர் காவலன் - வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்
by நிருபர் காவலன் - பெட்ரோல் விலை குறைப்பு
by நிருபர் காவலன்







