Tag: பெண் குழந்தை பலி
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் முன்னமே குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது.
சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுby நிருபர் காவலன்
- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறதுby நிருபர் காவலன்
- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்துby நிருபர் காவலன்
- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லைby நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதுby நிருபர் காவலன்












