Tag: நீர் தொட்டியில் விழுந்து
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் முன்னமே குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது.
சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறதுby நிருபர் காவலன்
- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுby நிருபர் காவலன்
- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்by நிருபர் காவலன்
- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்by நிருபர் காவலன்
- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதிby நிருபர் காவலன்












