Tag: பாராளுமன்ற உறுப்பினருக்கு
Posted in இலங்கை செய்திகள்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை
Author: நிருபர் காவலன் Published Date: 27/09/2023
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
காலி நீதவான் நீதிமன்றமே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிக்கு பிணை வழங்கியது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை
நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு தலா 50 லட்சம் ரூபா சரீர பிணை இரண்டு மற்றும் 50,000 ரூபா ரொக்கப் பிணையும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சொகுசு கார் ஒன்றிற்கான பாகங்களை பொருத்தியமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதுby நிருபர் காவலன்
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலிby நிருபர் காவலன்
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்by நிருபர் காவலன்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்காby நிருபர் காவலன்












