Tag: தாய்லாந்தில்
தாய்லாந்தில் ரயிலில் கிரேன் விழுந்ததில் 22 பேர் பலி
தாய்லாந்தில் ரயிலில் கிரேன் விழுந்ததில் 22 பேர் பலி
தாய்லாந்தில் ரயிலில் கிரேன் விழுந்ததில் 22 பேர் பலிவடகிழக்கு தாய்லாந்தில் ரயிலில் கிரேன் விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு தாய்லாந்தில் பயணிகள் ரயிலில்
வடகிழக்கு தாய்லாந்தில் பயணிகள் ரயிலில் கட்டுமான கிரேன் விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.
பாங்காக்கிலிருந்து 230 கிமீ (143 மைல்) வடகிழக்கே உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சீகியோ மாவட்டத்தில் புதன்கிழமை காலை இந்த
விபத்து நடந்தது. தாய்லாந்து தலைநகரிலிருந்து உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
அதிவேக ரயிலுக்கான கட்டுமான தளத்தின் அடியில்
பாங்காக்கிலிருந்து செய்தி அனுப்பும் அல் ஜசீராவின் டோனி செங், ரயில் அதிவேக ரயிலுக்கான கட்டுமான தளத்தின் அடியில் பயணித்தபோது மேல்நோக்கிச் செல்லும் ஒரு கிரேன் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
“அந்த கிரேனில் மோதியபோது ரயில் தடம் புரண்டது, அதைத் தொடர்ந்து ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது,” என்று செங் கூறினார்.
“ஆரம்ப அறிக்கைகள் நான்கு பேர் மட்டுமே இறந்ததாகத் தெரிவித்தன. அது மிக விரைவாக 12 ஆக உயர்ந்தது, இப்போது தாய் காவல்துறையினர் அல்
ஜசீராவிடம் கூறியதிலிருந்து அது 22 என்றும் இந்த கட்டத்தில் அது ஏறும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றும் நாங்கள் புரிந்துகொள்கிறோம், ”என்று அவர் கூறினார்.
“55 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் தற்போது அவர்கள் விபத்து நடந்த இடத்தை கடந்து செல்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
தீ அணைக்கப்பட்டு மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் வெடித்த குண்டு
தாய்லாந்தில் வெடித்த குண்டு
தாய்லாந்தில் வெடித்த குண்டு, தாய்லாந்தின் யாதப் பகுதியில் கார் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது .
இந்த காருக்குள் மறைத்து வைக்கப்பட்ட குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது .
இதன் பொழுது தாக்குதலை நடத்திய தற்கொலை தாரி உள்ளிட்ட ,ஒருவர் பலியாகி மேலும் 18 மக்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கட்டிடங்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த குண்டுகள், திடீரென வெடித்து சிதறின .
தாய்லாந்தில் கார் குண்டு தாக்குதல்
இதன் பொழுது அந்த கட்டிட தொகுதிகள் பல அழிந்து எரியும் காட்சிகள் காணப்படுகிறது.
தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயினை அணைக்கின்ற காட்சிகள் காணப்படுகின்றன.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றவியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர் .
இந்த தாக்குதலை நடத்தியதற்கு இதுவரை எவரும் உரிமை கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு தாக்குதலை நடத்தியது ஒரு பெண்ணாக உள்ளார் என முதல் கட்ட விசாரணங்களில் தெரிய வந்ததுள்ளது .
தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ,ஏன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கான விசாரணைகள் விசாரணை முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது .
குண்டுவெடிப்பு இடம் பெற்ற பகுதியில் பாரிய சேதம்
குண்டுவெடிப்பு இடம் பெற்ற பகுதிகளை சுற்றி வளைத்து தற்பொழுது போலீசார் மோப்ப நாயுடன் தமது தேடுதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
முக்கிய குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது தாய்லாந்துடைய உளவுத்துறை தீவிரமான செயலாற்றி வருவதாக தெரிய வருகின்றது .
இந்த குண்டுவெடிப்பு சம்பவமானது அந்த பகுதி மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாக அரசு அறிவித்துள்ளது.
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு

- கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கியூபா கடற்பரப்பில் தாக்கியது













