கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல்

கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல்

கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல் ,இலங்கையில் தற்பொழுது தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ,மிக முக்கிய கட்சிகளின் தலைகள் கட்சி மாறும் நடவடிக்கையில் தீவிரம் காண்பித்த வருகின்றன .

பதவி உயர்வுகள் மற்றும் பண பொட்டலங்கள் என வழங்கப்படுவதால் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசியல் வியாபாரிகள், மக்கள் விடுதலையின் கதாநாயகர்களாக ,தம்மை அறிமுகப்படுத்திய இவர்கள் தற்பொழுது கட்சி மாறும் காலணிகளாக மாற்றம் பெற்றிருக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் ஆளும் அதிகார வர்க்கத்தில், தற்பொழுது புதிய புதிய நபர்கள் எம்பிக்களாகவும் அமைச்சர்களாகவும் பதவி பிரமாணம் செய்ய நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இவை யாவும் டீல்களில் பின்புறத்தில் இடம் பெறும் நகர்வுகளாகவே பார்க்கப்படுகின்றது .

மதிப்பான பத்திர உரிமை ,வாகனங்கள் இறக்குமதி செய்வதற்காகவும் ஏனைய சில அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் இத்தனை ஆயிரம் டீல்களை ஒதுக்க வேண்டும் என்கின்ற டீலின் அடிப்படையில் தற்போது கட்சி மாறுவதான தகவல் வெளியாகி இருக்கின்றன.

மக்கள் நலனில் அக்கறை

மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக தம்மை இனம் காட்டிக் கொள்ளும் இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைகள் அரசியல் வியாபாரிகளாக தமது குடும்ப அரசியலை பார்க்கும் நோக்குடன் அரசியல்வாதிகளாக விளங்கி வருகின்றது அம்பலமாகியுள்ளது .

இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்ற இந்த வேளையில் தற்பொழுது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் இவ்வாறு பதவி மாறி வருவது.

தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.