ரணில் தலதா மாளிகையில் வழிபாடு

Spread the love

ரணில் தலதா மாளிகையில் வழிபாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் காலை கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டார்.

தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், கண்டி நகரபிதா திரு.கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்களினால் வரவேற்கப்பட்டு தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல மற்றும் நான்கு மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேமார் வரவேற்றனர்.

அதன் பின்னர், தலதா மாளிகையில் புனித தந்ததாது பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மேல்மாடிக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அங்கு மலர்

அஞ்சலி செலுத்தி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தலதா மாளிகையில் சிறப்பு விருந்தினர்களுக்காக

ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்துக்குக்குச் சென்று நினைவுக் குறிப்பேட்டில் நினைவுக் குறிப்பொன்றை இட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று பிற்பகல் மல்வத்து – அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, திலும்

அமுனுகம, குணதிலக ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜயவர்தன, ஐ.தே.க பொதுச் செயலாளர்

பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஐக்கிய லக் வனிதா.

முன்னணியின் தலைவி சாந்தினி கோன்கஹகே, கம்பளை நகரபிதா சமந்த அனுரகுமார


உள்ளிட்ட கண்டி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

    Leave a Reply