ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை க்கு எடுத்துக்கொள்ளப்படும்

போடு பால சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரோ, இஸ்லாத்தை அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டி சட்டமா

அதிபர் தாக்கல் செய்த வழக்கை, செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல முன்னிலையில் இன்று (16) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரான வண. கலகொட அத்தே ஞானசார தேரோ, இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது ஆஜரானார் என அட தெரன செய்தியாளர் தெரிவித்தார்.